ரவியை நீக்குங்கள், ஜனாதிபதியிடம் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்கள்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களினால் இவ்வாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்கவின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ள அவர்கள், ரவி கருணாநாயக்க தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கத் தவறினால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
Post a Comment