பாணந்துறையில் 30 நிமிடங்களில் 5 படுக்கையறைகளில் நுழைந்து தப்பிச்சென்ற நிர்வாண மனிதன்
பாணந்துறை, பிங்வத்த பிரதேசத் தில் நேற்று முன்தினம் இரவு வீடுகளுக் குள் புகுந்த நிர்வாண நபரால் பிரதேச மக்கள் பீதியடைந்ததாக பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான நிமல் குசுமசிறி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த மர்ம நபர் நிர்வாணமாக 30 நிமிடங்களுக்குள் பிங்வத்த பிரதேசத்திலுள்ள ஐந்து வீடுகளுள் நுழைந்து படுக்கையறைகளில் பதுங்கியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனல் பெரிதும் பீதியடைந்த வீட்டார் கூச்சலிட்டு பிரதேசவாசிகளுடன் ஒன்றிணைந்து அந்நபரை பிடிக்க முயற்சித்த போதிலும் அம் மர்ம மனிதன் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவத்துக்கு முகங்கொடுத்த பிரதேசவாசிகள் இது தொடர்பில் பிரதேசசபை முன்னாள் உறுப்பினருக்கு தெரியப்படுத்தியதுடன் அவரினூடாக 119 அவசர பொலிஸ் பிரிவுக்கு அறிவித்துள்ளனர். பின்னர் இவ்விடயம் தொடர்பில் பிங்வத்த பொலிஸ் காவல ரணுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மர்ம நபரை பிரதேசவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து மடக்கிபிடிக்க முயற்சித்த போதிலும் அவர் மாயமாக மறைந்திருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்வாண நபர், வீட்டில் கணவன்மார் இல்லாதிருந்த வீடுகளை குறிவைத்து நுழைந்திருந்ததாகவும், அவ்வாறு அந்நபர் நுழைந்த வீடொன்றில் கத்தியொன்றையும், மற்றொரு வீட்டில் துணியொன்றையும் விட்டு சென்றிருந்ததாக பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான நிமல் குசுமசிறி சில்வா தெரிவித்துள்ளர்.
இந்நபர் தொடர்பில் தகவல்கள் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment