Header Ads



ரவியும், மஹிந்தவின் 2 நிலைப்பாடுகளும்...!!


அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டு விதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சனிக்கிழமை (05) தெரிவித்திருந்ததாவது,

என்னுடைய நிலைப்பாடு இங்கு முக்கியமல்ல. மக்களின் நிலைப்பாடே மிகவும் முக்கியம். அனைவரும் கையெழுத்திட வேண்டியதில்லை. நான் வாக்களிக்க செல்லப்போவதில்லை. பாராளுமன்றத்தில் இதுவரை நான் வாக்களித்ததில்லை. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானமே அது.

அவர் ஞாயிற்றுக்கிழமை (06) தெரிவித்ததாவது,

இந்த அரசாங்கத்திற்கு எதிராக சென்று மிக விருப்பத்துடன், ரவிக்கும் எதிராக நான் வாக்களிப்பேன். இதனைத் தவிர்ந்திருக்க யாருக்கும் முடியாது. நான் முதல் தடவையாக இதில் தான் வாக்களிக்கிறேன். அதிகளவானோர் வாக்களிப்பர் என நான் நினைக்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும் வாக்களிப்பர்.

No comments

Powered by Blogger.