Header Ads



புத்தரின் பிறப்­பி­ட­த்தை பாது­காக்க 15 கோடி நிதி வழங்கும் இலங்கை

புத்த பெரு­மானின் பிறப்­பி­ட­மான லும்­பி­னியை பாது­காப்­ப­தற்கு ஜப்­பா­னுக்கு அடுத்து படி­யாக  முதற்­த­ட­வை­யாக நேபா­ளத்­திற்கு இலங்கை 15 கோடி ரூபா நிதி உதவி செய்­ய­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கி­னாலும் எம்­மிடம் இன­வாதம் இல்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நாட­ளா­விய ரீதியில் உள்ள 150 விகா­ரை­களை புனர்நிர்­மாணம் செய்­வ­தற்­கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

அர­சாங்கம் என்ற வகையில் நாட்டில் உள்ள தொல்­பொ­ரு­ளியல் சார்ந்த இடங்­க­ளையும் விகா­ரை­க­ளையும் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது அர­சாங்­கத்தின் பாரிய பொறுப்பும் கட­மை­யுமாகும்.இதன் அடிப்­ப­டை­யி­லேயே 150 விகா­ரை­களை புனர் நிர்­மாணம் செய்­வ­தற்­கான பணி­களை ஆரம்­பித்­துள்ளோம். இந்த நட­வ­டிக்­கைகள் தொடரும். அர­சர்­களை போன்று பெளத்த விகா­ரை­களை புனர்நிர்­மாணம் செய்­ய­வுள்ளோம். நான் பிர­த­ம­ராகும் வரைக்கும் விகா­ரை­களின் புனர்நிர்­மாண விவ­கா­ரத்தில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்கவில்லை. 

இந்­நி­லையில் உலகில் தற்­போது பெளத்த தர்­மத்தை பாது­காக்கும் முக்­கிய நாடு இலங்­கை­யாகும். பெளத்த தர்­மத்தை பாது­காத்து கொடுத்­ததும் இலங்­கை­யாகும். இல்­லையேல் மியன்மார் உள்­ளிட்ட நாடு­களின் நிலைமை என்­ன­வாகும். ஆகவே பெளத்த தர்­மத்தை பாது­காக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நான் பல இடங்­க­ளுக்கு பயணம் செய்த போது விகா­ரை­களின் உண்­மை­யான நிலை­மையை அறிந்து கொண்டேன். புன­ர­மைப்­ப­தற்கு உரிய நிதி இல்­லாமல் பல விகா­ரை­களின் நிர்­வாகங்கள் கஷ்­டப்­ப­டு­கின்­றன. இதனை கருத்­திற்­கொண்டே இந்த நட­வ­டிக்­கையை எடுத்தோம். 

எவ்­வா­றா­யினும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை நாம் தொடர்ந்து பாது­காப்போம். அதே­போன்று நாட்டில் உள்ள ஏனைய மதங்­களில் உரி­மை­களை பாது­காப்போம். இந்த நிகழ்வில் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்­கவும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம் சுவா­மி­நா­தனும் இங்கு வந்­த­மையை­யிட்டு நான் மகிழ்ச்சி அடை­கின்றேன். பெளத்த மத முன்­னு­ரி­மையை பாது­காப்போம். அதற்கு மாறாக இன­வாதம் எம்­மிடம் இல்லை. 

பெளத்த மத முன்­னு­ரி­மையை பாது­காக்கும் அதேநேரம் மறு­பு­றத்தில் இன நல்­லி­ணக்­கத்­திற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செற்­ப­டுவோம். அத்­துடன் விகா­ரை­களின் புனர் நிர்­மா­ணத்தின் போது தலதா மாளி­கையின் தங்­கத்­தி­லான கூரையை ஆர்.பிரே­ம­தாச நிர்­மா­ணித்தார். எனவே தற்­போது அதனை புனர் நிர்­மாணம் செய்ய திட்­ட­மிட்­டுள்ளோம்.

மேலும் நேபா­ளத்தில் அமைந்துள்ள புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினிக்கு ஜப்பான் நிதி உதவி செய்தது. இந்நிலையில் ஜப்பானுக்கு பதிலாக முதற்தடவையாக நாம் 15 கோடி ரூபாவை அடுத்த வருடம்   வழங்கவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித் துள்ளோம் என்றார்.

No comments

Powered by Blogger.