Header Ads



வடமாகாண புதிய அமைச்சர்களாக, விக்னேஸ்வரனுக்கு ஆதரவானவர்கள் நியமனம்

-பாறுக் ஷிஹான்-

புதிய நியமனங்களாக கலாநிதி கந்தையா  சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள்  அமைச்சராகவும்   அனந்தி சசிதரன்  புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம்  மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளார்.

 நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும்.
 முதலமைச்சர் விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினை தனது வசம் வைத்துள்ளார். இதன்மூலம் வெற்றிடமாயிருந்த அமைச்சர் பொறுப்புகள் விடயம் முடிவுக்கு வருகின்றது.

ஏற்கனவே விசாரணை அறிக்கை மீதான சர்ச்சைகளை அடுத்து இராஜினாமா செய்திருந்த குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரின் அமைச்சுக்களை முதல்வர் தன்வசம் எடுத்திருந்தார் .ஆமலும்  தமிழரசுக்கட்சி கல்வியமைச்சராக  மாகாண சபை உறுப்பினர்  ஆர்னோல்ட்மை    நியமிக்குமாறு முதல்வருக்கு பிரேரித்திருந்தது எனினும் அதனை முதல்வர் ஏற்க மறுத்திருந்தார்.

அத்துடன்   முதலமைச்சரினை பதவி கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சியினை முறியடிக்க தன்னுடன் நின்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சர்களை தெரிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.