அரசின் மீது முஸ்லிம்கள், நம்பிக்கை இழந்துள்ளனர் - கபீர் ஹாஷிம் பகிரங்க பேச்சு
முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு காலம் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்காமையின் காரணமாக நாம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். எனவே அரசாங்கம் துரிதமாக இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக காலம் தாழ்த்தாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனவாத தாக்குதல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பொலிஸார் அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்பாக வினவிய போதே அமைச்சர் Vi க்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க முடியாது. அரசாங்கம் என்ற வகையில் நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அண்மை காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. பல வர்த்தக நிலையங்களும் தொழிற்சாலைகளும் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டும் தீயிட்டு கொழுத்தப்பட்டும் உள்ளன.
எனவே இந்த விடயம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் பேசினோம். இதன்பிரகாரம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் பூரண நடவடிக்கை எடுக்கும் என்றும் இதற்கான பூரண அதிகாரத்தை பொலிஸூக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் எம்மிடம் குறிப்பிட்டார்.
எனினும் இந்த விடயம் காலம் கடந்தும் நடந்ததாக தெரியவில்லை. எனவே பொலிஸார் சட்டம் ஒழுங்கை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கான பூரண அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு காலம் கடந்தும் நடவடிக்கை எடுக்காதமையின் காரணமாக அரசாங்கத்தின் மீது நாம் நம்பிக்கை இழந்துள்ளோம். நாட்டில் வாழும் முஸ்லிம்களும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ஆகவே அரசாங்கம் தொடர்ந்து காலம் தாழ்த்தாமல் இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
நிச்சயமாக நம்பிக்கை இழந்துவிட்டோம். அதன் எதிர்வினையை அடுத்த தேர்தலில் நிச்சயமாக பிரதிபலிப்போம்.
ReplyDeleteஇந்த இக்கட்டான காலகட்டத்தில் இப்படி நாம்
ReplyDeleteஅதாவது 'சிறுபான்மை மக்கள்'
சிந்தித்தால் என்ன..??
����������������
இன,மத,மொழிப்பாகுபாடுகள் அற்ற
கொள்கையை அடிப்படையாகக் கொண்ட
இலங்கையின் ஓரங்கட்ட முடியாத ஒரு
உன்னதமான ஒரே கொள்கையுடன்
இயங்கும் அரசியல் சக்தியான
'மக்கள் விடுதலை முன்னணி' பக்கம்
நம்மவர்கள் அதாவது சிறுபான்மையினர்
தம் பார்வையைச் செலுத்தினால் என்ன..??
பேரீச்சம் பழ வரி முதல் அவ்வப்போது எமக்காக சிறுபான்மை மக்களுக்காக பாராளுமன்றத்தில்
நாம் கோரிக்கை விடுக்காமலே
குரல் கொடுக்கும் அவர்கள் நமக்கு நிச்சயம் உதவுவார்கள்..!
'இலங்கையில் பிறந்த அனைவரும்
சம உரிமையுடன்
சம நீதியுடன் நடத்தப்பட வேண்டும்
என்ற கொள்கையை
அடிப்படையாகக் கொண்டு
இயங்குபவர்கள்..!!'
JVP எனும்
மக்கள் விடுதலை முன்னணியுடன்
பேச்சுவார்த்தைகள் நடாத்துவதன்
மூலம், நம் சிறுபான்மை சமூகத்துக்கு
விமோசனத்தையும், பாதுகாப்பையும்
நிச்சயம் உறுதி செய்ய முடியும்..!!
அதன் பிறகு இந்த நாட்டில்
சிறுபான்மையினருக்கு எதிராக
எந்தப் பிரச்சினையும் நடக்காது
என்று நம்பலாம்.
'அடம்பன் கொடியும்
திரண்டால் மிடுக்கு' என்று
சும்மாவா சொன்னார்கள்..!!
சிந்திப்போமா..? செயல் படுவோமா..??
" பூமியை வெல்ல
ஆயுதம் எதற்கு..?
பூப்பறிக்க
கோடரி எதற்கு..?
பொன்னோ பொருளோ
'போர்க்களம்'
எதற்கு..??
'ஆசை' துறந்தால்'
அகிலம்' உனக்கு "
ஆம், சொகுசு வாழ்க்கையை
விரும்பும் இந்த சாக்கடை
சுய நல அரசியலை அப்படி
இலேசாக நம்
அரசியல்வாதிகள்
விட்டுவிட மாட்டார்கள்.
அப்படிப்பட்ட சுயநலமிகளை
ஓரங்கட்டிவிட்டு மக்களாகிய
நாம் அனவரும் ஒன்று சேர்ந்து
சிந்தித்து சீக்கிரமே ஒரு நல்ல
முடிவை எடுப்போம்..!
ஒன்றை மட்டும் ஞாபகம்
வைத்துக் கொள்ளுங்கள்..!
இந்த மைத்திரியோ, ரனிலோ,
மகிந்தயோ அல்லது
அரபு ( முஸ்லிம்) நாடுகளோ
நம்மைப் பாதுகாப்பார்கள்
என்று மட்டும் நம்ப வேண்டாம்..!
அவர்கள் அனைவரும்
முஸ்லிம்களை அழிக்கக்
கங்கணம் கட்டிக்
கொண்டு இயங்கும்,
இஸ்லாத்துக்கு எதிரான
சக்திகளுடன் கை
கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலக அளவில்
முஸ்லிம்களுக்கு அநியாயங்களும்,
அட்டூழியங்களும்
திட்டமிட்ட அடிப்படையில்
அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.
இலங்கையும் விதிவிலக்கல்ல..!
இவ்வளவும் நடப்பது,
எம்மை சீண்டுவதற்கும்,
அதன் மூலம்
ஒரு பெரிய கலவரத்தை
உண்டுபண்ணி
எம்மையும் எமது
பொருளாதாரத்தையும்
அழிப்பதும்தான்
(இந்த இனவாதிகளின்)
குறிக்கோள்..!
இதற்கு சியோனிஷ (யூத)
சக்திகளின் பலமான ஆதரவுண்டு.
நல்லாட்சியோ, நம் அரசியல்
தலைமைகளோ இந்தச்
சதித் திட்டங்களை நிறுத்த முடியாது.
தலைக்கு மேலே வெள்ளம்
போகிறது..!
நாம் இன்னும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தால்
நாளொரு மேனி,
பொழுதொரு வண்ணமாக
எமது உடமைகள்
அழிக்கப்படும்,
ஏன் உயிர்களின்
அழிவும் ஆரம்பமாகும்..!
இன்று அங்கு,
நாளை இங்கு
மறுநாள் எங்கும்..!!
"சுவர் இருந்தால்தான்
சித்திரம் தீட்டலாம்"
"சிந்தித்து அவசரமாக
முடிவெடுக்கும்
தருணம் இது"
"வாழை மலர் போல
பூமி முகம் பார்க்கும்
'கோழைக் குணம்'
மாற்று தோழா..!
நாளை உயிர் போகும்,
இன்று போனாலும்
'கொள்கை நிறைவேற்று'
தோழா..!!"
சிந்திப்போம், இனியும்
பார்த்துக் கொண்டிருக்காமல்
உடனே அவர்களுடன் (JVP)
பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம்.
நமது இந்த முடிவு,
இந்த நாட்டில் மட்டுமல்ல,
உலக அளவில் மெச்சப்படும்-
பாராட்டப்படும்,
இலங்கை அரசியலில்
மாபெரும் அரசியல்
புரட்சியை ஏற்படுத்தும்..!
¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥
All are same recism.pks go back to1988 89 history of JVP .THEY OPPRESSED PEOPLE
DeleteThis comment has been removed by the author.
Delete1988, 1989 காலப்பகுதியில் அவர்கள் நடப்பு அரசாங்கத்துடன் தமது போராட்டத்தை நடாத்தினார்கள்,
Delete1972 காலப்பகுதியில்
அன்றைய ஶ்ரீமாவோ அரசாங்கத்துடன் ஆயுதப் போராட்டம் நடாத்தினார்கள். அவர்களின் போராட்டங்களை அந்தந்தக் கால அரசுகள் கொடூரமாக அடக்கியது தெரிந்ததே.
அதுபோல, வட-கிழக்கில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தினார்கள்,
ஈற்றில் அழிக்கப்பட்டார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி பெரும்பான்மை சமூகத்தையும், ஈழப்புலிகள் சிறுபான்மை
தமிழ் சமூகத்தையும் பிரநிதித்துவப்படுத்தி தமது ஆயுதப் போராட்டத்தை நடாத்தினார்கள்.
இருதரப்பும் தம் கொள்கைகளை மறந்து
நீதி நியாயங்களை மறந்து
மனித தர்மங்களை மறந்து ஆயுதங்களில் மட்டும் நம்பிக்கை வைத்ததன் மூலம் அழிவைச் சந்தித்ததே வரலாறு.
ம.வி.மு தம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, தம் தவறை உணர்ந்து ஜனநாயக அரசியல் பக்கம் வந்து தமது அரசியல் பயணத்தை மேற் கொண்டிருக்கிறார்கள்.
1988, 1989 காலப்பகுதியில் தாம் விட்ட தவறை உணர்ந்துதான் இப்போது ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் பழைய குப்பையைக் கிண்ட வேண்டியதில்லை.
JVP அரசியல் நீரோட்டத்துக்கு வந்த பின்பு அது
இலங்கை அரசியலில்
பலவித மாற்றங்களை
ஏற்படுத்தி இருப்பதை
யாரும் மறக்கவோ
மறுக்கவோ முடியாது..!
மஹிந்த ராஜபக்ஷ முதன் முதலாக ஜனாதிபதித் தேர்தலில் நின்ற போது, அவரை வெற்றி பெறச் செய்தது இந்த மக்கள் விடுதலை முன்னணி என்றால் அது மிகையாகாது..!
அன்று மஹிந்த தோற்றிருந்தால், இன்று இந்த நாடு
நவ காலனித்துவத்தின் கட்டுப்பாட்டில் சிக்கி சீரழிந்திருக்கும், அதன் மூலம் சிறுபான்மையோர் குறப்பாக இலங்கை முஸ்லிம்கள் பாரதூரமாகப் பாதிக்கப் பட்டிருப்பார்கள்.
JVP இன் பிரசன்னம் அதை ஓரிரு தசாப்தங்களுக்குப் பின் தள்ளியுள்ளதே தவிர முற்றாக இல்லாமல் செய்யவில்லை.
அது இப்போது சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ள நல்லாட்சியின் மூலம் மீண்டும் அரங்கேற ஆரம்பித்துள்ளது.
இப்போது நடந்து கொண்டிருப்பதல்லாம் அதுதான்..!
மஹிந்த காலத்தில் யூதர்களுக்கென்று தூதரகம் இல்லை, ஆனால் இந்த நல்லாட்சியில் அது உண்டு.
இனவாதிகளை இயக்கும் பின்புலமும் அதுவே.
அதற்கெதிராக இந்த நல்லாட்சி எதுவும் செய்யாது, செய்ய முடியாதுள்ளது..!
இன்றைய பிரதமர்
சியோனிசவாதிகளின் செல்லப்பிள்ளை.
GSP+ ஐக் கொடுத்து
அவர்கள் தமது வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது நம்மவர்க்கு
இப்போதைக்குப் புரியாது.
அது புரியும் போது எவ்வளவோ நடந்து முடிந்திருக்கும்..!!
நாம் சிந்தித்து ஒரு
முடிவுக்கு வர
இனியும் தாமதித்தால் விளைவுகள்
மிகவும் பயங்கரமானதாகவே இருக்கும்..!
படைத்தவன் அல்லாஹ் ஒருவன்தான் நம்மைக்
காக்க வேண்டும்.!!
இந்த நல்லாட்சி அல்ல
என்பதைக் கூறிவைக்கின்றேன்..!!!
++••++•••++•••++•••++••+
I agree with jubaideen 100%
DeleteBeside the previous government is most better than this government. If there will be a vote ele.. people will show theor reaction...insha allah
ReplyDeleteநிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
ReplyDelete(அல்குர்ஆன் : 2:155)
JRJ economic projects were sabotaged by regional
ReplyDeleteforces,using LTTE and Mahinda defeated LTTE of
Northern Tamils and proved he was not happy about
Muslims community living in the country without
enough harm . So , he loved if somebody unleashed
terror against Muslims copying Bush tactics which
has not ended yet . The only difference in the
approach between Bush and Mahinda was , Bush went
after past , present and future dangers to the US
where as Mahinda just created an enmity and a
terror group for his desire of being a false
nationalist against all minorities. Sirisena who
was trained in that camp all his life and Ranil
who is scared of being called anti-Buddhist,are
both willing to let it pass without any ha hoo !
BUT MUSLIMS HAVE ALREADY TAKEN THEIR DECISION
IN ANY FUTURE ELECTIONS . BUT REMEMBER NOT TO
GET MISLED AGAIN. MY3 IS DEAF ! RANIL BLIND
AND MAHINDA DUMB ! THEIR FOLLOWERS TOO. THEY
HAVE TAUGHT THEIR NEXT IN LINE LEADERS HOW TO
IGNORE OR CREATE TENSION AMONG COMMUNITIES TO
THEIR ADVANTAGE AND DETRIMENTAL TO THE
VICTIMS.
Thank you for you understanding.
ReplyDeleteStill no responses from others.