ஜனாதிபதியும் கைவிரிக்கிறாரா..?
-இன்றைய விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்-
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட இனவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
தினமும் காலையில் எழுந்தால் எங்கேனுமொரு நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் எரிக்கப்பட்ட செய்தியே நம்மை வந்தடைகிறது.
நேற்று முன்தினம் அதிகாலை நுகேகொடவில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை மஹரகமவில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த ஐந்து நாட்களுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான நான்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து நேற்று வரை சுமார் 28 க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் சி.சி.ரி.வி. கமெராக்களில் பதிவாகியுள்ளன.
இருந்த போதிலும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அதற்கான முயற்சிகளையும் பொலிசார் மேற்கொள்ளவில்லை. மாறாக இவ்வாறான சம்பவங்களை திருடர்கள் செய்திருக்கலாம் என்றும் கடை உரிமையாளர்களே காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் கூறுவது வேடிக்கையாகவுள்ளது.
தமது கடமையை சரியாகச் செய்யாது பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைப் போட்டுவிட்டுப் போவது என்பது இந்த நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களின் கடமை அல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இதேபோன்றுதான் நேற்றைய தினம் நடைபெற்ற ஆளும்கட்சியின் குழுக் கூட்டத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இதன்போது பொலிசார் தமது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்றால் அப் பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைக்கலாம் என ஜனாதிபதி ஆலோசனை கூறியுள்ளார்.
அப்படியானால் இலங்கைப் பொலிசார் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாதளவு திராணியற்றவர்கள், திறமையற்றவர்கள் என ஜனாதிபதி கூற வருகிறாரா? அல்லது இராணுவத்தினராலும் முடியாது என்றால் சர்வதேச இராணுவத்தை வரவழைக்க முடியும் என ஜனாதிபதி கூறுவாரா?
நிறைவேற்று அதிகாரத்தைத் தன்வசம் வைத்துக் கொண்டு ஜனாதிபதியும் இவ்வாறான கதைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார் என்றால் இந்த நாட்டு முஸ்லிம்கள் யாரிடம்தான் போய் முறையிடுவது?
இதற்கிடையில், ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சில் இலங்கை தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் தாம் இலங்கை முஸ்லிம்களுக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தனது நாட்டு முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலைமை இவ்வாறே செல்லுமெனில் இலங்கை சர்வதேச நாடுகள் மத்தியில் தனக்கிருக்கும் நற்பெயரை தானாகவே கெடுத்துக் கொள்ள வேண்டிவரும். அதற்கு முன் ஜனாதிபதி கண்விழிப்பாரா?
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட இனவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
தினமும் காலையில் எழுந்தால் எங்கேனுமொரு நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் எரிக்கப்பட்ட செய்தியே நம்மை வந்தடைகிறது.
நேற்று முன்தினம் அதிகாலை நுகேகொடவில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை மஹரகமவில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த ஐந்து நாட்களுக்குள் முஸ்லிம்களுக்கு எதிரான நான்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து நேற்று வரை சுமார் 28 க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் சி.சி.ரி.வி. கமெராக்களில் பதிவாகியுள்ளன.
இருந்த போதிலும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அதற்கான முயற்சிகளையும் பொலிசார் மேற்கொள்ளவில்லை. மாறாக இவ்வாறான சம்பவங்களை திருடர்கள் செய்திருக்கலாம் என்றும் கடை உரிமையாளர்களே காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் கூறுவது வேடிக்கையாகவுள்ளது.
தமது கடமையை சரியாகச் செய்யாது பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைப் போட்டுவிட்டுப் போவது என்பது இந்த நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களின் கடமை அல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இதேபோன்றுதான் நேற்றைய தினம் நடைபெற்ற ஆளும்கட்சியின் குழுக் கூட்டத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இதன்போது பொலிசார் தமது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்றால் அப் பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைக்கலாம் என ஜனாதிபதி ஆலோசனை கூறியுள்ளார்.
அப்படியானால் இலங்கைப் பொலிசார் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாதளவு திராணியற்றவர்கள், திறமையற்றவர்கள் என ஜனாதிபதி கூற வருகிறாரா? அல்லது இராணுவத்தினராலும் முடியாது என்றால் சர்வதேச இராணுவத்தை வரவழைக்க முடியும் என ஜனாதிபதி கூறுவாரா?
நிறைவேற்று அதிகாரத்தைத் தன்வசம் வைத்துக் கொண்டு ஜனாதிபதியும் இவ்வாறான கதைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார் என்றால் இந்த நாட்டு முஸ்லிம்கள் யாரிடம்தான் போய் முறையிடுவது?
இதற்கிடையில், ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சில் இலங்கை தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் தாம் இலங்கை முஸ்லிம்களுக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தனது நாட்டு முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலைமை இவ்வாறே செல்லுமெனில் இலங்கை சர்வதேச நாடுகள் மத்தியில் தனக்கிருக்கும் நற்பெயரை தானாகவே கெடுத்துக் கொள்ள வேண்டிவரும். அதற்கு முன் ஜனாதிபதி கண்விழிப்பாரா?
இவனொரு மனநோயாளி ஆளு இவனுக்கு எல்லாம் ஜனாதிபதியாக கொஞ்சம் கூட தகுதியில்லை.
ReplyDeleteJ v p year 2020
ReplyDelete👍👍
Deleteமுதுகெழும்பில்லாத மைத்திரியையும் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆட்சியில் அமர்த்தியவர்களுக்கும் காபிர்களை பாதுகாப்புக்கு அழைத்தவர்களுக்கும் இறைவன் வழங்கும் தண்டனையோ இது!
ReplyDeleteகையாலாகாத அரசிலுள்ள சம்புக்க தனது அன்றிருந்த அதிகாரத்தை ஒரினச்சேர்க்கையாளருடன் சேர்ந்து பிரயோகிக்கின்றான்.
அல்லாஹ்வே போதுமானவன்!!
ஞானசாரவும் முஸ்லீமோ என்னவோ சொல்ல தெரியா.
ReplyDelete