Header Ads



நாம் பிறை தேடினோம், அவர்கள் கரை தேடினார்கள்..!!

-அபூ ஆமினா-

வெள்ளிக்கிழமை இரவு 10 மணி­யி­ருக்கும். ரமழான் தலைப்­பிறை கண்ட பர­ப­ரப்பில் முழு நாட்டு முஸ்­லிம்­களும் இருந்து கொண்­டி­ருந்த வேளை. அப்­போ­துதான் அந்த செய்தி பரவத் தொடங்­கி­யது. "தென் மாகா­ணத்­திலும் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­திலும் உள்ள பல முஸ்லிம் கிரா­மங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­விட்­டன. மண்­ச­ரிவில் சிக்கி ஒரே வீட்­டி­லி­ருந்த மூன்று சிறார்கள் உயி­ரி­ழந்­து­விட்­டார்கள்" என்­பதே அந்த செய்தி.

தென் மாகா­ணத்தின் நிலை­மை­களை அறி­வ­தற்­காக அங்கு மீட்பு மற்றும் நிவா­ரணப் பணி­களில் ஈடு­படும் எனது நண்பர் ஒரு­வரைத் தொடர்பு கொண்டேன். நிலைமை மிகவும் மோச­மா­கி­விட்­டது என்­பதே அவ­ரது பதி­லா­க­வி­ருந்­தது.

" அக்­கு­ரஸ்ஸ, போர்வை நகர் முற்­றாக நீரில் மூழ்­கி­விட்­டது. சுமார் 550 முஸ்லிம் குடும்­பங்கள் அங்கு பாதிக்­கப்­பட்­டுள்­ளன. பலர் வீட்­டுக்­கூ­ரை­க­ளிலும் மலை­க­ளிலும் தஞ்­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள். வெள்ளி மாலை 6 மணி வரை சிலரை பட­கு­களில் சென்று மீட்டோம். அதன்­பி­றகு இருட்­டா­கி­விட்­டதால் மீட்பு பணிகள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. நாளை காலை அவர்­களை மீட்­ப­தாயின் அதிக வலு கொண்ட பட­குகள் தேவை. முடிந்தால் பட­கு­களை அனுப்பச் சொல்­லுங்கள்" என்றார் அவர்.

" நோன்பும் ஆரம்­பா­கி­விட்­டது. வெள்­ளத்தில் சிக்கி வெளி­வ­ர­மு­டி­யா­துள்ள மக்கள் உண­வுக்கு என்ன செய்­வார்கள்? " எனக் கேட்டேன். வெள்ளி காலை முதல் அவர்கள் எத­னையும் சாப்­பிட்­டி­ருக்க வாய்ப்­பில்லை. ஏற்­க­னவே அவர்கள் நோன்பு நோற்­றது மாதி­ரித்தான்" என்றார் அவர்.

ரமழான் ஆரம்­ப­மான மகிழ்ச்­சியில் இருந்த என்னை இந்த செய்தி கவ­லையில் ஆழ்த்­தி­விட்­டது. நிலை­மையின் பார­தூ­ரத்தை பிறரும் அறிந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்­கா­கவும் முடி­யு­மா­ன­வர்­களை உதவி செய்யக் கோரியும் எனது முகநூல் கணக்கில் பதி­வொன்றை இட்டேன்.

முதலில் களத்தில் இறங்­கிய பேரு­வளை மீன­வர்கள்
நாட்டில் வெள்ளம் ஏற்­பட்டு பல பகு­திகள் பாதிக்­கப்­பட்­டு­விட்­டன என்ற செய்­தியை அறிந்த தும் வழக்கம் போன்றே இம்­மு­றையும் முந்திக் கொண்­டனர் பேரு­வளை மீன­வர்கள். தமது பட­கு­களை லொறி­களில் ஏற்றிக் கொண்டு இரத்­தி­ன­புரி மற்றும் மாத்­தறை மாவட்­டங்­க­ளுக்கு விரைந்­தனர். வெள்­ளத்தில் சிக்கி கரை­சேர முடி­யா­த­வாறு தத்­த­ளித்த மக்­களை இன மத பேதம் பாராது மீட்­டெ­டுத்­தனர். அவர்­க­ளது துணிச்­ச­லான செயற்­பா­டு­களும் அர்ப்­ப­ணிப்பும் என்­றென்றும் பாராட்­டத்­தக்­கவை. அல்லாஹ் அவர்­க­ளுக்கு பரக்கத் செய்­வா­னாக.

நாமும் உதவுவோம்

வழமை போன்று நாட்டின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும்  நிவாரண உதவிகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை ஒருங்கிணைப்பதற்கான நிலையம் ஒன்று மாத்தறை மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், தேசிய சூறா சபை ஆகியவற்றின் ஓத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ளது. உதவிகளை அனுப்ப விரும்புவோர் இந்த நிலையத்தை தொடர்பு கொள்ள முடியும்.

முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்ற நிலையில் இவ்வாறானதொரு பாரிய அனர்த்தத்திற்கு முகங்கொடுக்கவேண்டி வந்துள்ளது. இந்நிலையில் அம் மக்களது அவலங்கள் நீங்கி இயல்பு வாழ்க்கை திரும்ப இந்த புனிதமான நாட்களில் நமது அமல்களின்  போது பிரார்த்திப்போம்.

1 comment:

  1. அரசு என்ன செய்கிறது ?

    ReplyDelete

Powered by Blogger.