இன - மத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, நல்லிணக்கத்திற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக விஷேட குழு
பரவி வரும் இன,மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொலிஸாருக்கு மேலதிகமாக விஷேட குழுக்களை அமைக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் அந்த பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய அவரின் கட்டுப்பாட்டில் கீழ் வரும் கிராமசேவகர் பிரிவுகளில் தனித்தனியாக இந்த சிறப்புக் குழுவை அமைக்க பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திட்டமிட்டுள்ளார்.
25 பேர் கொண்ட இந்த குழுவானது சர்வ மதங்களை பிரதி நிதித்துவம் செய்யும் வகையில் இந்த குழுவானது அமைக்கப்படவுள்ளது.
இலங்கை முழுதும் உள்ள 400 இற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்களை மையப்படுத்தி 14 ஆயிரத்து 22 கிராமசேவகர் பிரிவிலும் செயற்படும் விதமாக இந்த குழு அமைக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார்.
என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது ஒன்றுமே புரியல்ல உலகத்திலே.
ReplyDeleteநாலு குழு அமைத்து ஒண்ணுமே புடுங்கல, இதுல ஐந்தாவதா ஒரு குழு? குழு அமைப்பதில் நம்ம பொலிஸ் விரைவில் கின்னஸ் சாதனை படைக்கும் போலுள்ளது
ReplyDeleteஅடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரப்போகுது மமாக்களே எச்சரிக்கையாக இருங்கள் நம்முடைய எச்சையைகளை நம்பாதீர்கள்
ReplyDelete