Header Ads



காவத்தையில் பணப் பரிமாற்றம், மோதலாக மாறியது - 3 வீடுகளுக்கு தீ வைப்பு

காவத்தை பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து அப்பிரசேத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவத்தை, எந்தான தோட்டத்தில், கப்பெல பிரிவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பணப் பரிமாற்றமே இந்த மோதலுக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், 3 வீடுகளுக்கு தீ மூட்டப்பட்டமையினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.