Header Ads



ஞானசாரர் ஒளிந்துள்ளார், அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைமுகமான இடமொன்றில் ஒளிந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் என்பதற்காக அவரை வெளியில் வர வேண்டாம் என எச்சரித்துள்ளோம் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவிலயலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் ஊடகப்பேச்சாளர் டிலாந்த விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள ஞான­சார தேரர் நேற்று அவ­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கில் ஆஜ­ரா­க­வில்லை.

தேரருக்கு கடுமையான சுகயீனம் காரணமாகவே அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என நீதிமன்றில் தேரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனூஷா பேரு­சிங்க நேற்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து 31 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தேரர் உயிருக்கு பயந்து மறைமுகமான இடமொன்றில் ஒளிந்திருப்பதாக அவ்வமைப்பு இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Any organization got to be people friendly and it never
    should be anti-people , even to a section of the
    population . THE ORGANIZATION MUST BE STOPPED WHEN IT
    OPENLY ACT AGAINST A PARTICULAR SECTION OF THE PEOPLE
    IN PUBLIC AND NOW FOR FOUR YEARS UNDER TWO DIFFERENT
    GOVERNMENTS WORKING FOR REFORM. ANY FOREIGN INVESTOR
    MUST FIRST LOOK AT THE FATE OF CENTURIES OLD LOCAL
    INVESTORS ! IF THE GOVT IS KEEN AND DOING EVERYTHING
    TO ATTRACT MORE FOREIGN INVESTMENTS , THEN PROTECT
    YOUR OWN CITIZENS AND THEIR INVESTMENTS THAT ARE
    HISTORIC AND MANY CENTURIES OLD FROM EXTREMIST
    DESTRUCTIVE AND WELL IDENTIFIED ELEMENTS .

    ReplyDelete
  2. டேய் டிலந்த - போய் மச்சான வெளில வரச்சொல்லு. கோழை மாதிரி எத்தனை நாளைக்குத்தான் ஒழிஞ்சுக்கிட்டு மச்சான் இருப்பான். அவன்தான நாட்டில பெரிய சன்டியன் - ஒன்னமாதரி.

    வா வெளில அவன வரச்சொல்லு. போ ஒழியாதே ஒன்னோட சன்டித்தனத்தக் காட்டு - எங்காவது எதயாவது பள்ளிய கடைய கொழுத்தலாமான்னு பாரு. முடிஞ்சா நாலு பேர கெழுத்து. ஒன்னோட கூட்டத்துக்கு தீனி போடாம நீ ஒழியலாமா கோழயாட்டம்.

    வா மச்சான் - வெளிய வா.................

    ReplyDelete
  3. வெட்கம் வெட்கம்

    ReplyDelete

Powered by Blogger.