கேக்கை விழுங்கிய, சிறுவன் பலி
விழுங்கிய கேக் துண்டு ஒன்று தொண்டையில் அடைத்துக்கொண்டதால் சிறுவன் ஒருவன் மரணமானான்.
மாத்தறை, தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் ஒருவனே நேற்று பிற்பகல் நேரத்தில் இவ்வாறு மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கேக் துண்டு தொண்டையில் அடைத்துக்கொண்ட நிலையில், தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனளிக்காமலேயே இச்சிறுவன் உயிரிழந்துள்ளான்.
Post a Comment