Header Ads



முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு, சமைத்த உணவுகளை வழங்காதீர்கள்

அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு, சமைக்கப்பட்ட உணவுகளை வழங்குவதால் பிரச்சினைகள் எழக்கூடும். அதனால், உலருணவுப் பொருட்களை மாத்திரம் அம்மக்களுக்கு வழங்குமாறும் சமைத்த உணவை வழங்க வேண்டாமென்றும், சப்ரகமுவா மாகாண இடர் முகாமைத்துவக் குழு, அறிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதாயின், கீழ்க் காணப்படும் வகையிலான உதவிகளை வழங்குமாறும், அக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த வகையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக, குடிநீர்ப் போத்தல்கள், உலருணவுகள், சிறுவர் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் மற்றும் நெப்கின்ஸ்கள் போன்றன அவசரமாகத் தேவைப்படுவதாக, அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.  

No comments

Powered by Blogger.