Header Ads



அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க அங்கிகாரம்

“மீள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்ட கட்டடங்களை மீள் நிர்மாணம் செய்வதற்கு உகந்த வேலைத்திட்டமொன்றை சிபாரிசு செய்வதற்கு, அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது” என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று -31- நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது, அவர் இதனைக் கூறினார்

அவர்  தொடர்ந்து கூறுகையில், “நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, வியாபார அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் அடங்கிய அமைச்சரவை உபக்குழு நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.

No comments

Powered by Blogger.