அரபுக் கல்லூரிகளைப் பற்றிய பிற மதத்தவர்களின், சந்தேகங்களை மாற்றியமைக்கலாம் - அகார் முஹம்மத்
-விடிவெள்ளி-
இலங்கையிலுள்ள அரபுக்கல்லூரிகளுக்கென ஒரு பொதுவான பாடத் திட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் அரபுக் கல்லூரிகளைப்பற்றிய பிற மதத்தவர்களின் வீணான சந்தேகங்களை மாற்றியமைக்க முடியும்.
இலங்கையிலுள்ள அரபுக்கல்லூரிகளுக்கென ஒரு பொதுவான பாடத் திட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் அரபுக் கல்லூரிகளைப்பற்றிய பிற மதத்தவர்களின் வீணான சந்தேகங்களை மாற்றியமைக்க முடியும்.
இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது. அரபுக் கல்லூரிகளில் பயங்கரவாதம் போதிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டை வீணாக முன்வைத்துள்ளனர். இந்த தப்பான அபிப்பிராயத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜாமிஆ நளீமியா கலாபீட பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸி.அகார் முஹம்மத் (நளீமி) கூறினார்.
பேருவளை, சீனன்கோட்டை ஜாமிஆ நளீமியா கலா பீட ADRT மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையில் உள்ள அரபுக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தை ஒருமுகப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஆரம்ப செயலமர்வில் விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். முஸ்லிம் சமய, கலாசாரத் திணைக்களம் ஏற்பாடு செய்த இச் செயலமர்வில் சுமார் 50 பேர் வரையிலான உலமாக்கள் பங்குபற்றினர் அதில் அவர் மேலும் கூறியதாவது,
ஆறு தசாப்தகால வரலாற்றில் இன்றைய செயலமர்வு மிகவும் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகும். நீண்டகால முயற்சியை அறுவடை செய்யும் சந்தர்ப்பத்தை நாம் அடைந்திருக்கின்றோம். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக நாம் அனைவரும் ஒன்றுகூடி சிறந்த ஒரு முடிவை எடுக்க வேண்டும். வர்ஹதா, முதவக்கிதாவுக்கான ஒரு பாடத்திட்டத்தை தயாரித்து அந்தப் பாடத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டு இப்போது அமுலுக்கு வந்து பரீட்சைத் திணைக்களம் தொடர்ந்தும் பரீட்சைகளை நடாத்தி வருகின்றது.
அதனைத் தொடர்ந்து தானவியாவுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அந்தப்பாடத் திட்டமும் அரச அங்கீகாரத்தைப் பெற்று பரீட்சை திணைக்களத்தினால் இப்போது அது அமுல் நடத்தப்பட்டு பொதுப் பரீட்சை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இப்போது நாங்களே தயாரித்த மர்ஹதா ஜாமிஆவுக்கான பாடத்திட்டம் இருக்கிறது.
அந்தப் பாடத்திட்டத்தை தயாரிக்கின்ற குழுவைச் சேர்ந்த பலரும் இங்குள்ளனர். அந்தப் பாடத்திட்டத்தை மூன்றாம் கட்டமாக நாங்கள் தயாரித்தோம். அது பல்கலைக்கழகத் தரத்தினைக் கொண்ட ஒரு பாடத்திட்டமாகும். என்றாலும் அது தொடர்பான நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. பரீட்சைத் திணைக்களம் ஒரு நாளும் ஒரு பட்டச்சான்றிதழை வழங்காது. அப்படியாக இருந்தால் இந்தப் பாடத்திட்டத்துக்கு நாங்கள் உயர் கல்வி அமைச்சு ஊடாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அரச அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மர்ஹதா ஜாமிஆ என்று வைக்கப்பட்டுள்ள பெயரை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். இது பிரச்சினையல்ல.
இப்போது நமக்கு முன்னாலுள்ள தேவை என்னவென்றால் அரச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளத்தக்க ஒரு பொதுப்பாடத்திட்டம், இறுதியாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்ட முமாகும். இவர்கள் உலமாக்களாக, மௌலவிமார்களாக, சேஹ்மார்களாக அரபுக் கலாசாலைகளிலிருந்து பட்டம் பெற்று வெளியேறுகின்றபோது மத்ரஸாவுடைய சான்றிதழை அவர்கள் எடுத்துச் செல்லும் அதே நேரத்தில் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு தரம்மிக்க சான்றிதழையும் பெற்றுச்செல்வார்கள்.
இலங்கையில் உள்ள உலமாக்களே இன்று முழு உலகிற்கும் முன்மாதிரிமிக்கவர்களாக திகழ்கின்றனர். உலமாக்கள் ஒரு ஜமாஅத் அமைப்பிலோ தரீக்கா அமைப்பிலோ அல்லது இயக்க அமைப்பில் இருந்தாலும் இவர்கள் அனைவரினதும் கண்களும் உம்மத்தின் பக்கமே உள்ளன. உம்மத்துல் வாஹிதா என்பதே எம் அனைவரினதும் கோட்பாடாகும்.
அதன் காரணமாகவே நாம் அனைவரும் பாடத்திட்டத்தை ஒருமுகப்படுத்தும் பணியில் எல்லா கருத்து முரண்பாடுகளை விட்டு விட்டு வந்துள்ளீர்கள். இந்த நிலையை பாக்கிஸ்தானில், இந்தியாவில், பங்களாதேஷில் காணமுடியாது. இந்த வகையில் இலங்கை உலமாக்கள் முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியானவர்களாக உள்ளனர்.
Yes we appreciate sheik agar
ReplyDeleteAlhamdullilah
ReplyDeleteExactly Arabic colleges have to go long way to do this...
ReplyDeleteThere are more than 10.000 Arabic colleges in Indian subcontinent..most of them are like cleric making machines..
They do not know have access to world knowledge that they live in ? It is high time to think about its structure, syllabi, it's teaching methods, it's Misson and vision ..its products..
No point in talking about it ..change is needed