Header Ads



செல்பி எடுக்கமுயன்ற, வைத்தியர் மரணம்

காணாமல் போன 27 வயதுடைய இளம் வைத்தியர் ஒருவரின் சடலம் மாகெலிய பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர், செல்பி எடுப்பதற்காக பாறை ஒன்றின் மீது ஏறிய நிலையில் அவர் வழுக்கி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளார் என பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதியில் அந்த வைத்தியர் விழுந்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே வைத்தியரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அகலவத்தை தேசிய கல்வி பயிற்சி நிலையத்தில் தமிழ் மொழி கற்கைநெறியை மேற்கொள்ள வருகை தந்த வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து வைத்தியரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.