Header Ads



சிங்கள - முஸ்லிம் மோதலுக்கு, நடவடிக்கை முன்னெடுப்பு - விமல் வீரவன்ச

தமிழீழ அடிப்படைவாத பிரிவினரால், மனித படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படும் தருணத்தில், யுத்தம் நிறைவு செய்யப்பட்டு 8 வருடங்கள் நிறைவடைந்ததுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் பொலிஸ் வாகனத்திற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தெற்கில் சிங்கள- முஸ்லிம் மோதலுக்கு அடிகோலுவதற்கு சூட்சும நடவடிக்கைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முண்ணனியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 

பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்த, அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள சமஷ்டி அரசியலமைப்பும், இந்தியாவிற்கு நமது சேவைகளை மாத்திரமன்றி நாட்டையே பலிகொடுக்கும் எட்கா உடன்படிக்கை தொடர்பிலும், தேசிய பொருளாதார வளங்களை விற்றல் மற்றும் நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரத்தை பலவினப்படுத்தல் என்பன இதன் நோக்கம் என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

1 comment:

  1. Why not you tell, who is supporting and acting against the Muslims, burning shops and Masjids in the south?

    ReplyDelete

Powered by Blogger.