Header Ads



கொழும்பின் சில பகுதிகளிலிருந்து, மக்கள் அவசர வெளியேற்றம்

கொழும்பு - வெல்லம்பிட்டிய பிரதேசத்திலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்படுகின்றனர்.

தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.

இதனால் அப்பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் தமது உடமைகளுடன் அப்பகுதியிலிருந்து வெளியேறி வருவதுடன் பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றனர்.

2

களனி கங்கையை அண்டியுள்ள மக்களை அவசரமாக வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி, கொலன்னாவ, கடுவெல, வெல்லம்பிட்டி, பியகம, சேதவத்த தொம்பே, பன்வெல, பாதுக்கை, அவிசாவளை பகுதிகளில் உள்ளவர்களுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 117 என்ற அவசர அழைப்பு மற்றும் 0112 136 136, 0112 670 002 மற்றும் 0112 136 222 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.