Header Ads



9 பிள்ளைகளை பெற்ற தாயை, அனாதை இல்லத்திற்கு அனுப்ப, பொலிஸில் ஒப்படைத்த மகன்

9 பிள்ளைகளை பெற்ற 82 வயதுடைய தாயை பார்த்துக் கொள்ள முடியாமல் அனாதை இல்லத்தில் ஒப்படைக்குமாறு கோரி மகன் ஒருவர் எல்ல பொலிஸாரிடம் முறையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எல்ல, தொடம்கொல்ல உடவெடிய பிரதேசத்தில் உள்ள 82 வயதுடைய 9 பிள்ளைகளின் தாயாருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு முன்னர் குறித்த தாயாரின் கணவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பாழடைந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியாக வாழ்கின்ற நிலையில், இடைக்கிடையே அவரது பிள்ளைகளின் வீட்டிலும் அவர் வாழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் அவரது மகள்களினால் தாயை பார்த்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் குறித்த தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த தாயாரின் பிள்ளைகள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக எல்ல பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.