8 குழந்தைகளை குத்திக் கொன்றவள், விசாரணையில் இருந்து விடுதலை..!
எட்டு குழந்தைகளை வீட்டில் வைத்து குத்தி கொலை செய்த அவுஸ்திரேலிய தாய் ஒருவர் அப்போது மன அமைதியற்றவராக இருந்தார் என கூறி வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2014 டிசம்பரில் கெய்ன்ஸில் வைத்து தனது நான்கு ஆண் குழந்தைகள் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மருமகனை ரைனா தாய்டே என்ற அந்த பெண் கொலை செய்யும்போது அவர் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவராக இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சட்்ட ரீதியான முடிவு கடந்த மாதம் எடுக்கப்பட்டபோதும் இது பற்றி தற்போதே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவர் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பியுள்ளார்.
40 வயதான அந்த பெண் பிரிஸ்பானில் உள்ள உயர்பாதுகாப்பு சிறையில் தடுக்கப்பட்டுள்ளார். அவர் விடுவிக்கப்படுவார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதில் இரண்டு முதல் 14 வயது கொண்ட குழந்தைகளே கொல்லப்பட்டனர்.
Post a Comment