Header Ads



ஞானசாரரை அடுத்த பிரபாகரனாக சித்தரித்து, கைதுசெய்ய 20 ஜீப் வண்டிகள் தயார்

கலகொட அத்தே ஞானசார தேரரை அடுத்த பிரபாகரனாக சித்தரிப்பதாக பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பில் இன்று -25- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இதை தெரிவித்துள்ளனர். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் நடைபெறும் அனைத்து இனவாத செயற்பாடுகளுக்கும் ஞானசார தேரரே காரணம் என்று அனைவரும் கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல், தாக்குதல், குழு மோதல் என எது ஏற்பட்டாலும் அதற்கு முழுக் காரணம் ஞானசார தேரர் என்றே கூறுகின்றனர். இதன்மூலம் அடுத்த பிரபாகராக அவரை சித்தரிக்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆகவே இவரை கைது செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. 20 ஜீப் வண்டிகள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ஞானசார தேரரே அனைவரதும் இலக்காக காணப்படுகின்றார். ஆனால் இவரை கைது செய்தால் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும் என்றால் முதலில் சீ.வி.விக்னேஸ்வரன், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோரை கைது செய்ய வேண்டும். காரணம் அவர்கள் வடக்கில் இனவாதத்தை தூண்டுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. namdu muslim arasila waadigalil perumbalanor mudughu elumbu illa.awagalukku kidaikum asadisgali mattum yosothi engalai sagadikkirargal.awaragal 7 * hotel sapadu ,nalla car . vasadiyudan valgirargal.ellathukum kanaakku kodukkum neram undu. i say about 90% muslim arasiyawdigal

    ReplyDelete

Powered by Blogger.