'நான் ஒரு முஸ்லிமாக இருப்பதால், நாய்களைக் கொல்வேன் என பிரச்சாரம்'
வெசாக் கொண்டாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர், கட்டாக்காலி நாய்களைக் கொல்லும் திட்டமொன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் இருந்ததாக வெளியான தகவலை அவ்வமைச்சின் அமைச்சர் பைஸர் முஸ்தபா நிராகரித்தார். நான், பொறுப்பாகவிருக்கின்ற அமைச்சின் மூலமாக தெரு நாய்களைக் கொல்லப்போவதாக, சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்தச் செய்தி தொடர்பில், தெளிவுப்படுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தான், ஒரு முஸ்லிமாக இருப்பதனால் இன முரண்பாட்டை உருவாக்கும் முயற்சி காரணமாக, தெரு நாய்களைக் கொல்லும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாகப் பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஆனால், கூறப்படுவதற்கு மாறாக தனது அமைச்சு, விலங்குகளைக் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
NAIKAL WAALHA.
ReplyDeleteMustafa should consult Ganasara (Yahapalanaya Advisor) before taking any action against street dogs.
ReplyDelete