Header Ads



நான் மக்களுக்காக போராடுறேன், ஹக்கீம் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் - ரிசாத்



-விடிவெள்ளி-

வில்­பத்து விவ­கா­ரத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது மௌனத்தை கலைக்க வேண்டும். வில்­பத்து விவ­காரம் தனி­ம­னிதன் ஒரு­வ­னது பிரச்­சி­னை­யல்ல. இது சமூ­கத்தின் பிரச்­சி­னை­யாகும். ஜனா­தி­ப­தியின் வன பிர­க­ட­னத்­தினால் சமூ­கமே பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்கள் வில்­பத்­துவை ஆக்­கி­ர­மிக்­க­வில்லை என்­பதை ஹக்கீம் பகி­ரங்­க­மாகச் சொல்ல வேண்டும்.

சமூ­கத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒன்­றி­ணைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் வேண்­டுகோள் விடுத்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள காடு­பேணும் கட்­டளைச் சட்­டத்தின் கீழான வன பிர­க­டன வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்­னையோ எனது கட்­சி­யையோ விமர்­சித்துக் கொண்­டி­ருப்­பதால் பயன் எதுவும் ஏற்­பட போவ­தில்லை. இவ்­வா­றான விமர்­ச­னங்கள் சமூ­கத்தைக் காட்டிக் கொடுப்­ப­ன­வா­கவே அமையும்.

வில்­பத்து விவ­காரம் மாத்­தி­ர­மல்ல, அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம், தேர்தல் முறையில் மாற்­றங்கள் தொடர்­பிலும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் வேறு­ப­டாது ஒரு­மித்துப் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

எமது கொள்­கைகள் வேறு­பட்­ட­ன­வை­யாக இருந்­தாலும் சமூ­கத்தின் பொது­வான விட­யங்­களில் நாம் ஒற்­று­மைப்­பட வேண்டும். இதற்­காக நான் அமைச்சர் ஹக்­கீ­முக்கு அழைப்பு விடுக்­கின்றேன்.

பள்­ளி­வா­சல்கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கும் நாம் தீர்­வுகள் பெற்றுக் கொள்ள வேண்­டி­யுள்­ளது. கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் மூன்று வரு­ட­மாக மூடப்­பட்டுக் கிடக்­கின்­றது.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சினை தீர்­வின்றி தொடர்­கி­றது. இவ்வாறான பிரச்சினைகளை நாம் ஒன்றுபடுவதன் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்.

வில்பத்து விவகாரத்தில் நான் 4 வருடங்களாக தொடர்ந்து மக்களுக்காக போராடி வருகிறேன் என்றார்.

3 comments:

  1. அவர் எதற்கு வாய் திறக்கணும். அவருர்தான் சமூகம் பற்றிய அக்கரையற்றவர். இது எங்கட சமூகத்துக்கு விளங்குதில்லியே.

    ReplyDelete
  2. அவர் எந்த நாட்டுக்கு அரச பிரதிநிதியாக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அந்த நாட்டில் ஜனாதிபதியையும் பிரதமரையும் புகழ் பாடிக்கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை,

    ReplyDelete
  3. He's a curse to our Muslim...our Muslims also foolish...still keeping him in a leaders position...it's a time to reconstruct Muslim congress...Mr.Rishad al Sri Lankan Muslims know abt u r courage for fighting for Muslims rights in Sri Lanka...as a suggestion better we have to inform to Muslim country Embassies in Sri Lanka regarding Muslim hated activities By Buddhist monks...

    ReplyDelete

Powered by Blogger.