விகாரைக் காணியை, முஸ்லிம்கள் பிரித்தெடுத்து விட்டனர்
(எஸ்.எல். நிசார்)
இறக்காமம் மாயக்கல்லி பிரதேச விகாரைக்கான காணி பெறும் விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் துசித்த வணிகசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஞானசாரர் பேசுகையில்,
பொத்துவில் பிரதேசத்திலுள்ள முகுது மாவிகாரைக்கு 293 ஏக்கர் காணி உள்ளது. ஆனால் விகாரையின் நிர்மாணப் பணிக்கும் பராமரிப்புக்குமாக 4 ஏக்கர் மட்டுமே உள்ளது. மீதி அனைத்தையும் முஸ்லிம் மக்கள் பிரித்தெடுத்துள்ளனர். இதேபோன்று சம்பூர் பிரதேசத்திலும் நாம் பல விட்டுக் கொடுப்புகளுடன் காணிகளை வழங்கி உள்ளோம். இன்றைய கட்டத்தில் காணியைப் பெற்றுக் கொடுப்பது மாவட்ட செயலாளரின் கடமையாகும்.
மேலும் முஸ்லிம் பள்ளிவாசல், இந்து ஆலயம் என்பன அமைப்பதற்கே உரிய அனுமதி பெறப்படவேண்டும். ஆனால் பௌத்த விகாரைகளுக்கு அவ்வாறான அனுமதிகள், எதுவும் பெறப்படாமலே நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்கலாம்.
எனவே மாயக்கல்லி பிரதேசத்திலுள்ள காணிச் சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணி 2 ஏக்கர் வழங்கிவிட்டு விகாரை அமைப்பதற்கான காணியை பெற்றுத்தருவதற்கு மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கடி நாயைக் கூன்டில் அடைக்காமல் வெளியில் விட்டுக்கொன்டிருந்தால் அது குரைத்துக்கொன்டு எவனயாவது கடிக்கத்தான் பார்க்கும் .......................
ReplyDeleteவிமலை அடைக்க காரணத்தைத் தேடிக் கொன்டவர்களுக்கு ஞானத்தை அடைக்கவா காரணம் இல்லாமல் போய்விட்டது ????????
பைத்தியக்காரன் உளருகிறான்...
ReplyDelete