75 வயது மணமகன் 65 வயது மணமகள் திருமணம் - சஜித் ஏற்பாடு
வயதான தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு அனுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்னேவ, நெகம்பஹ, அலிவங்குவ கிராமத்தில் வாழ்ந்த பத்து தம்பதிகளுக்கு இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் 75 வயதுடைய மணமகன் மற்றும் 65 வயதுடைய மணமகள் உட்பட் 10 தம்பதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
5 பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய டீ.ஜனா மற்றும் 65 வயதுடைய ஏச்.ஏ.சோமாவத்தி ஆகிய தம்பதி உட்பட கிராமத்தில் திருமணம் செய்யாமல் இருந்த தம்பதிகளுக்கே இவ்வாறு சட்டரீதியாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிக்காட்டலுக்கமைய, நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் ஷாந்த கஹவல அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து தகவல் பெற்றுக் கொண்டுள்ளார்.
அமைச்சரின் ஆலோசனைக்கமைய, அனைத்து பிள்ளைகளையும் பாடசாலை அனுப்புவதற்கு அவசியமான நடவடிக்கை, கிராமத்தில் வாழும் 30 குடும்பங்களுக்கு கைதொழில் வேலைத்திட்டம் ஆரம்பித்தல், திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்த மக்களுக்கு திருமணம் செய்து வைத்தல், அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றிற்கு அவசியமான ஆவணங்கள் வழங்கி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த கிராமத்தில் வாழும் அனைவருக்கும் நிரந்தர வீடு வழங்குவதற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஜவின் ஆலோசனை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செரியாக பார்த்தால் பல தசாப்தங்களாக விபச்சாரத்தில் இருந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளது.சட்டத்தை நிலை நிலை நிறுத்தி இருந்தால் இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிறைச்சாலை சென்று இருக்க வேண்டும்,ஒரு பழமொழி உண்டு (ஆமை சுடணும் மல்லாத்தி அதை நாம் சொன்னால் பொல்லாப்பு)செரி புரிந்து வாழட்டும்,
ReplyDelete