ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருட அரசியல் வாழ்க்கை - சபாநாயகர் காத்தான்குடிக்கு விஜயம்
சபாநாயகர் கரு ஜயசூரிய, முதன்முறையாகக் காத்தான்குடிக்கு, எதிர்வரும் 10ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்க்கையின் நிறைவையொட்டி எழுதப்பட்டுள்ள 'கிழக்கின் வாசல்' எனும் நூல் வெளியீட்டு விழாவில், பிரதம அத்தியாகக் கலந்துகொள்ளவே, சபாநாயகர், காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில், தென்கிழக்குப் பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில், இந்த நூல் வெளியீட்டு விழா இடம்பெறவுள்ளது.

Post a Comment