Header Ads



பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொள்வது, ஆட்சியாளர்களுக்கு பொருத்தமற்றது . மஹிந்த

பாதாள உலக குழுக்களின் தலைவர்களுக்கும் அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திறன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் நிலைமையில், கொலை செய்யப்பட்ட சமயங் என்ற பாதாள உலக தலைவரும் ஆட்சி அதிகாரத்தை நிறுவியிருக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நடக்கும் அனைத்தையும் ஆட்சியாளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

எந்த சம்பவமாக இருந்தாலும் அதனை மறுநாள் பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொள்வது ஆட்சியாளர்களுக்கு பொருத்தமற்றது.

பொலிஸாரும் சிறை கூண்டுகளும் இருந்தால் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என பலர் நம்புகின்றனர். எனினும் அதில் எந்த உண்மையும் இல்லை.

அரச ஊழியர்களும் தற்போது கடும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.