Header Ads



நாவ­லப்­பிட்டி பள்­ளி­வா­ச­ல் மீது தொடர் கல்வீச்சு, எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும்படி துஆ கேட்க கோரிக்கை

-ARA.Fareel-

நாவ­லப்­பிட்டி பலந்­தொட்ட தக்­கியா பள்­ளி­வா­ச­லுக்கு இனந்­தெ­ரி­யா­தோரால் மேற்­கொள்­ளப்­பட்ட கல்­வீச்சுத் தாக்­கு­த­லினால் தக்­கி­யாவின் கூரைத்­த­க­டுகள் இரண்டு சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளன. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அதி­கா­லையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் பலந்­தொட்ட தக்­கியா பள்­ளி­வா­சலின் தலைவர் ஜி.சி.முபஷ்சிர் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மிடம் முறைப்­பாடு செய்­துள்ளார்.இச்­சம்­பவம் பற்றி தக்­கியா பள்­ளி­வா­சலின் தலைவர் ஜி.சி.முபஷ்சிர் விளக்­க­ம­ளிக்­கையில்; 

‘தொடர்ந்து பல மாதங்­க­ளாக தக்­கி­யா­வுக்கு கல்­வீச்சு நடை­பெ­று­கி­றது. அதி­கா­லை­யிலே கற்­கலால் தாக்­கப்­ப­டு­கின்­றது. தக்­கி­யாவைச் சூழ பெரு­மான்­மை­யி­னத்­த­வர்­களே வசிக்­கி­றார்கள். சுமார் நான்கு மாதங்­க­ளுக்கு முன்பு தக்­கி­யா­வுக்கு  அண்­மையில் புத்தர் சிலை­யொன்­றினை வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­தார்கள்.

அதற்­கான நிர்­மா­ணப்­ப­ணி­களும் இடம்­பெற்­ற இச்­சந்­தர்ப்­பத்தில் நாம் அல்­லாஹ்­விடம் துஆ கேட்டு நியாயம் வேண்­டினோம். பின்னர் புத்தர் சிலை நிறு­வு­வது நிறுத்­தப்­பட்­டது.பலந்­தொட்ட ஜும்ஆ பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தும் சுமார் 2 கிலோ மீட்­ட­ருக்கு அப்­பாலே தக்­கியா அமைந்­துள்­ளது. இங்கு சுமார் 35 முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்­கின்­றன.

20 வருட வர­லாற்­றினைக் கொண்ட இந்த தக்­கியா அமைச்­சர்கள் எம்.எச்.ஏ.ஹலீம், பைசர் முஸ்­தபா ஆகி­யோரின் முயற்­சி­யினால் 2 ½ மாதங்­க­ளுக்கு முன்பே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டது.இப்­ப­கு­தியைச் சேர்ந்த பௌத்த விகா­ரையின் குரு­மார்­க­ளுடன் இச்­சம்­பவம் தொடர்பில் கலந்துரையாடி சுமுக தீர்வு பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம். தக்கியாவை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும்படி துஆ பிரார்த்தனைகளை நடத்தி வருகிறோம் என்றார்.   

No comments

Powered by Blogger.