Header Ads



சாராய உற்­பத்­தி­ச்சா­லையை மூடு­ங்கள் - கிழக்கு முதலமைச்சரிடம், ரதன தேரர் கோரிக்கை


மட்­ட­க்க­ளப்பு கல்­கு­டாவில் தற்­போது சாராய உற்­பத்­திச்­சாலை அமைக்கப்படுவதாக தகவல் கிடைத்­துள்­ளது.  எனவே கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் இன­வாதம் பேசு­வதை விடுத்து மேற்­படி விவ­கா­ரங்­க­ளுக்கு சட்­டத்­தினை பயன்­ப­டுத்தி முட்­டுக்­கட்­டை­யி­டு­வது குறித்து சிந்­திக்க வேண்டும் என அது­ர­லியே ரதன தேரர் கோரிக்கை விடுத்தார்.

ஊட­கத்­துறை அமைச்சில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த இவ­ரிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது பல புதிய உற்­பத்­திகள் பல­வற்­றி­னையும் மேம்­ப­டுத்த அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அவ்­வா­றான உற்­பத்தி வலு­வாக்­கத்தின் போது கிரு­மி­நா­சினி பயன்­பாட்­டினை முற்­றாக ஒழிக்­கவும் எதிர்­பார்த்­துள்ளோம். கிருமி நாசி­க­ளுக்கு மாறாக இயற்கை சக்­தி­களின் பயன்­பாட்­டினை அதி­க­ரித்­துக்­கொள்ள நாம் எதிர்­பார்த்­துள்ளோம்.

ஒரு விடயம் குறித்து சக­லரும் ஒரு­மித்த சிந்­த­னை­க­ளுடன் பார்க்­கின்ற போது நல்­லி­ணக்­கமும் ஏற்­படும். அதனால் அர­சாங்­கத்தின் புதிய திட்­டங்­க­ளுக்கு வடக்கு, கிழக்கு என்ற எல்லை அடிப்­ப­டை­யி­லான பேதங்­க­ளையும், இன ரீதி­யி­லான வேறு­பா­டு­க­ளையும் களைந்து செயற்­பட வேண்டும்.

அதேபோல் மேற்­படி வேலைத்­திட்­டங்­களின் போது அதனுள் மது ஒழிப்புச் செயற்­பா­டுகள் குறித்தும் அதிக கவனம் செலுத்த தீர்­மா­னித்­துள்ளோம். தற்­போது கல்­கு­டாவில் சாராய உற்­பத்தி தொழிற்­சாலை ஒன்று நிறு­வப்­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அது குறித்து அர­சாங்கம் கவ­ன­மெ­டுக்க வேண்டும்.

இந்­திய பீகார் மாநி­லத்தில் செய்­யப்­பட்­டது போன்று முத­லை­மைச்­சர்கள் தலை­யீடு செய்து மதுப் பொருட்கள் உற்­பத்­திக்கு சட்ட ரீதி­யி­லான நட­வ­டிக்கை எடுத்து அவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு முட்­டுக்­கட்­டை­யிட வேண்டும்.

இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள முத­லை­மைச்­சர்கள் இன­வாதம் பேசு­கின்­றரே தவிர மது ஒழிப்பு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து கவனம் கொள்­வ­தில்லை.

அவர்­களும் அது குறித்து அதிக கவனம் செலுத்துகின்ற போதுதான் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நாம் அடைய முடியும். எனவே மேற்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முதலமைச்சர்கள் இருவரும் இனவாதப் பேச்சுக்களை விடுத்து அரசாங்கத்தின் செயற்பாடுகளின் போது கைகோர்த்துக்கொண்டு செயற்பட்டால் அவர்களுக்கு நாமும் உதவியாக இருப்போம் என்றார். விடிவெள்ளி

3 comments:

  1. VERY GOOD OPINION.SLMC TOTALLY BANCRFTED

    ReplyDelete
  2. Eastern chief minister must curb this very appalling liquor project. It's his moral responsibility.

    ReplyDelete
  3. மானம்கெட்ட முஸ்லிம் MP கள் ஒரு பௌத்த தேர்ர் கேட்குமளவுக்கு தள்ளாகப்ப்பட்டுள்ளனர்.
    பதவி , பணம் இதுதான் நமது முஸ்லிம் MP களின் முழு நேர சிந்தனை.
    இவர்களை தெரிவுசெய்த மக்களாகிய நாம்தான் வெட்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.