Header Ads



புதிய கட்சி ஆரம்பிக்கும் மேர்வினின், கவர்ச்சிகரமான திட்டங்கள்..!

புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அநீதிக்கு உட்பட்டுள்ள தம்மைப் போன்ற எந்தவொரு நபரும் இந்த அரசியல் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எனது அரசியல் கட்சியின் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் அரசியல் வாதிகள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது.

வீ.ஐ.பீ என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. மந்திரி என்பதற்கு பதிலாக மக்கள் சேவகன் என விழிக்கப்பட வேண்டும்.

எனது கட்சி இளைஞர் யுவதிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் கட்சியின் பெயர் அல்லது வேறும் விபரங்களை மேர்வின் சில்வா அறிவிக்கவில்லை.

1 comment:

  1. Dr Mervyn Silva should be the president of Sri Lanka. He will rule us with the guidance of the maha sanga. Non Patriots will be tied to trees or in their absence lamp posts.

    ReplyDelete

Powered by Blogger.