ஜெனிவாவில் சிங்களவர்கள் எதிர்ப்பு பேரணி - மகிந்த ஆதரவு எம்.பி.க்களும் பங்கேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை காரியாலயத்திற்கு முன்னால் சிங்கள மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டன் உள்ளிட்ட ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்த புலம் பெயர் சிங்கள மக்கள் இந்த எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், ரோஹித அபோகுணவர்தன, பந்துல குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த எதிரப்பு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் விடுதலைப் புலிகளில் தலைவர் வே.பிரபாகரன் பெயரை குறிப்பிட்டு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

Post a Comment