Header Ads



முஸ்­லிம்­களின் ஆத­ரவு இன்றி எக்­கா­ரணம் கொண்டும், தேர்­தல்­களை வெற்­றி­கொள்ள முடி­யாது - பஷில்

முஸ்­லிம்­களின் ஆத­ரவு இன்றி எக்­கா­ரணம் கொண்டும் எதிர்­வரும் தேர்­தல்­களை வெற்­றி­கொள்ள முடி­யாது இதனை நாம் உணர்ந்தி­ருக்­கின்றோம்.

பொது ஜன பெர­முன கட்சி முஸ்­லிம்­களை அர­வ­ணைத்துச் செல்லும். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்டு அவற்றைத் தீர்ப்­ப­தற்­கான திட்­டங்­களை வகுப்­ப­தற்­கா­கவே முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி அமைக்­கப்­பட்­டுள்­ளது என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் உள்ள பொது­ஜன பெர­மு­னவின் காரி­யா­ல­யத்தில்நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இக்­கூட்­டத்தில் வடக்கு கிழக்கு உட்­பட நாட்டின் ஏனைய மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் மஹிந்த தரப்பு ஆத­ர­வா­ளர்கள் பெரு­ம­ளவில் கலந்து கொண்­டனர்.

கூட்­டத்தில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது. 

எதிர்­கா­லத்தில் நாம் அமைக்­க­வி­ருக்கும் ஆட்­சியில் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் முக்­கி­ய­மாகக் கவ­னத்திற் கொள்­ளப்­படும். முஸ்­லிம்­களின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்து வைப்­ப­தற்கு இப்­போதே திட்­டங்கள் வகுக்­கப்­பட்டு விட்­டன. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்கு முன்பு மாகாண சபை தேர்தல் நடாத்­தப்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மாகாண சபைத் தேர்தல் குறிப்­பிட்ட காலத்தில் காலம் தாழ்த்­தப்­ப­டாது நடத்­தப்­பட வேண்­டு­மென அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரு­கின்றோம்.

புதிய உள்­ளூ­ராட்சித் தேர்தல் முறையை இன்று சிறு­பான்மைக் கட்­சிகள், சிறு­கட்­சிகள் எதிர்க்­கின்­றன. என்­றாலும் அமைச்சர் அதா­வுல்­லாஹ்வே இந்தச் சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து அங்­கீ­காரம் பெற்றுக் கொண்டார். அப்­போது சிறு­பான்மைக் கட்­சிகள் இந்தச் சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ரவு நல்­கின. ஆனால் இப்­போது அதனை எதிர்க்­கின்­றன.

அர­சியலில் பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை அன்று நாம் சட்­டத்­திற்குள் உள்­வாங்கிக் கொள்­ள­வில்லை ஏனென்றால் முஸ்லிம் பெண்கள் அர­சி­யலில் ஈடுப்­ப­டு­வதை விரும்ப மாட்­டார்கள் என்ற கார­ணத்­தி­னா­லேயே அன்று சட்­டத்­திற்குள் உள்வாங்கப்படவில்லை முஸ்லிம்கள் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் கீழ் அணிதிரள வேண்டும்.

இந்த அமைப்பின் ஆலோசனைப்படியே முஸ்லிம்கள் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

 ARA.Fareel

No comments

Powered by Blogger.