RSS இந்துக்கள் அல்ல, இந்துக்களின் பெயரால் கலவரம் செய்யும் தீவிரவாதிகள் - அரவிந்த் கெஜ்ரிவால்
ஆக்ராவில் RSS தலைவர் மோகன் பகவத் பேசும்போது இந்துக்களின் மக்கள் தொகை அதிகரிக்கக்கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது ? அப்படி ஏதும் இல்லை. மற்ற சமூகத்தின் ஜனத்தொகை அதிகரிக்கும்போது இந்துக்களை எது தடுக்கிறது ? இந்துக்கள் அனைவரும் 10 குழந்தைகளை பெற வேண்டும் என்று பேசினார்.
இதற்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த பதிலடியில்...
இந்துக்களை தூண்டிவிடுவதற்கு முன் RSS தலைவர் மோகன் பகவத் 10 குழந்தைகளை பெறட்டும். அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கட்டும் என்று கூறினார். மேலும் கூறுகையில் எப்போதும் மதக்கலவரத்தை தூண்டுவதே RSS ன் வேலையாக இருக்கிறது.
RSS என்பது இந்துக்கள் அல்ல, இந்துக்களின் பெயரால் கலவரம் செய்யும் தீவிரவாதிகள் என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கூறினார்.
Post a Comment