Header Ads



மாணவர்களை நிர்வாணப்படுத்தி பகிடிவதை - பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தில் கொடூரம்

பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தின் விவ­சாய பீடத்தின் புதிய மாண­வர்கள் எட்டு பேரை நிர்­வா­ணப்­ப­டுத்தி துன்­பு­றுத்தி பகி­டி­வ­தைக்­குட்­ப­டுத்­திய 15 மாண­வர்­ க­ளையும் எதிர்­வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கண்டி நீதிமன்ற நீதவான் உத்­த­ர­விட்­டுள் ளார்.

பகி­டி­வதை சம்­பவம் நேற்று முன் தினம் இரவு மெகொட கலி­க­முவ என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

விவ­சாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாண­வர்கள் சிலர் பேரா­தனை பொலிஸ் பிர­தே­சத்தில் மெகொட கலி­க­முவ என்ற இடத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வரு­கின்­றனர். இவர்­களில் சிலர் புதிய மாண­வர்கள் 8 பேரை கடத்திச் சென்று இவ் வாடகை வீட்டில் வைத்து நிர்­வா­ண­மாக்கி பல வகை­யான துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளா­க்கி­ய­துடன் தாக்­கி­யு­முள்­ளனர்.

இப் பகி­டி­வதை குறித்து பல்­க­லைக்­க­ழக உயர் அதி­கா­ரி­க­ளுக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப் ­பெற்­ற­தை­ய­டுத்து அதி­கா­ரிகள் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் குறிப்­பிட்ட வாடகை வீட்டை சோத­னை­யிட்டு பகிடி­வதை புரிந்­த­வர்கள் என சந்­தே­கப்­ப டும் 15 மாண­வர்­களை பேரா­தனை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இவர்­களை கைது செய்த பொலிஸார் கண்டி நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை ஆஜர் செய்­த­ போது நீதிவான் இவர்­களை எதிர்­வரும் மார்ச் 02 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார். பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட 08 மாணவர்களும் தற்போது பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

No comments

Powered by Blogger.