Header Ads



'அரசாங்கத்தை கவிழ்ப்பதே, சிறையிலுள்ள வீரவன்சவுக்கு செய்யும் கைமாறு'

அரசாங்கத்தை கவிழ்த்து வீட்டுக்கு அனுப்புவதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள விமல் வீரவண்ஸவுக்கு செய்யக் கூடிய கைமாறாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அரசியல் அமைப்பொன்றை உருவாக்குதற்கு பெரும் தடையாக இருந்த காரணத்தினாலேயே விமல் வீரவண்ஸ சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அசாங்கம் மேற்குலகிற்கு அடிமைப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாங்கத்தை கவிழ்த்து வீட்டுக்கு அனுப்புவதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள விமல் வீரவண்ஸவுக்கு செய்யக் கூடிய கைமாறாகும்.

இதற்காக மூன்றாவது விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டிடும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.