Header Ads



நியூசிலாந்தில் தீ விபத்து - 3 இலங்கையர்கள் மரணம்


நியூசிலாந்தின் சவுத் ஓக்லாந்தில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழர்கள் மூவர் பலியாகினர். மேலும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில், கைலேஸ் தனபாலசிங்கம் என்ற அகதிகள் நலன்களுக்கான சட்டவாளர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி (39 வயது) மகன் (5 வயது) மாமியார் (66 வயது) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

மேலும், கைலேஸ் தனபாலசிங்கத்தின் 11 வயது மகளும், மாமனாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

அதிகாலையில் வீட்டுக்குள் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து வெளியே ஓடி வந்த சிறுமி தகவல் வெளியிட்டதையடுத்து. அயலவர்கள், தீயணைப்பு படையினரை உதவிக்கு அழைத்தனர்.

தீயணைப்புப் படையினர் வந்து உயிரிழந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டனர்.

கைலேஸ் தனபாலசிங்கம், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் இருந்து அகதியாக வந்து சவுத் ஓக்லாந்தில் குடியேறியிருந்தார்.

No comments

Powered by Blogger.