Header Ads



உரிமை கோரும், ஆதாரத்துடன் வாருங்கள்..!

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் பிரதேசசெயலகப் பிரிவு ஜே-88கிராமிய உத்தியோகத்தர் பிரிவில் பரச்சேரிப் பகுதியில் சொந்தப் பெயரில் அல்லது தங்களுடைய பரம்பரையில் ஆதாரத்துடன் உரிமை கோரத்தக்க வகையில் காணிகள் இருப்பவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) யாழ் முஹியித்தீன் பள்ளிவீதியில் அமைந்துள்ளயாழ் மன்பஉல் மதரஸாவிற்கு காலை 9.00 மணிக்குகுறிப்பிட்டநேரத்திற்குதவறாதுசமூகம் தருமாறு யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் யாழ் மாவட்டகாணிச் செயலணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மௌலவி பி.ஏ.எஸ். சுப்யான் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தங்களதுகாணியின் உறுதிபிரதியையும் கொண்டுவருமாறும்  இக் கூட்டத்தில் தங்களுடையகாணிகளைதங்களுக்கும் யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் திட்டங்களுக்கும் எவ்வாறுபயன்படுத்தலாம் என்பதுபற்றியும் அதிலுள்ள சவால்கள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படயிருப்பதுடன் முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளது. 

மேலும் இப் பரச்சைவெளிக் காணிதொடர்பாக கடந்தகாலத்தில் இதில் மேற் கொள்ளப்பட்டகுடியேற்றமுயற்சிகள் அபிவிருத்திகள் தொடர்பாகவும் அறிந்திருப்பவர்கள் ஏதேனும் இது தொடர்பான ஆவணங்கள் வைத்திருப்பவர்களும் சமூகநலன் கருதி எம்முடன் தொடர்புகொள்ளும் படியும் முடியுமானால் இக் கூட்டத்திற்கு சமூகமளித்துஉதவும் படியும் அன்புடனகேட்டுக் கொள்கின்றோம் என யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் யாழ் மாவட்டகாணிச் செயலணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மௌலவிபி.ஏ.எஸ். சுப்யான் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.