Header Ads



விபத்தில் வர்த்தகர் வபாத், பிரதேச வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளைகொடிகள் பறப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று -30- அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஓட்டமாவடியைச் சேர்ந்த கணிபா மபாஸ் (30) என்பவரே உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரிப்பர் ரக வாகனத்தில் வேனில் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் பின்னால் சென்று மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

வேனில் பயணம் செய்தவர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

வேன் மற்றும் ரிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டும் வெள்ளைக் கொடிகள் இட்டும் துக்கம் அனுஸ்டிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


5 comments:

  1. If the death one as the name indicates... We pray for his blessed life in the next world but we would like to remind the Muslims.. That raising white flag for a death Muslim is not from the Sunnah of Muhammed (sal) so It can not be the sunnah of Muslim too.

    May Allah Guide us with pure knowledge of Islam as practiced by SAHAABA (salaf)

    ReplyDelete
  2. انالله وانا اليه راجعون

    ReplyDelete
  3. yes i Agree your comments

    ReplyDelete
  4. சகோதரர்களே வெள்ளை கொடிக்கும் இஸ்லாத்திக்கும் என்ன சம்மந்தம் அவருக்காக எல்லம் வல்ல அல்லஹ் விடம் பிரார்திப்போம்

    ReplyDelete

Powered by Blogger.