மன்சூர், மன்னிப்புக் கேட்க வேண்டும்..!
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் “இது பௌத்தநாடு,அவர்கள் விரும்பிய இடங்களில் சிலைகளை வைக்கலாம்.அதற்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.அதனை எந்த ராசாவாலும் அகற்ற முடியாது” எனக் கூறியுள்ளதனூடாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மனங்களையும் காயப்படுத்தியுள்ளார்.இப்படியான பேச்சுக்களை பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரது வாய்களில் இருந்து கூட அவதானிக்க முடியவில்லை.இப்படியான ஒருவருக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஒவ்வொருவரும் தவறான பிரதிநிதியை தெரிவு செய்ததற்காக வேண்டி இறைவனிடம் எவ்வாறு பதில் சொல்லப் போகிறார்கள்? தனக்கு வாக்களித்த மக்களை அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத நிலைக்கு தள்ளிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அந்த மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.
இவர் கதைத்த வீடியோ பகிரங்கமாக வெளியாகியிருந்தும் அதனை நம்ப மறுக்கு அப்பாவி முஸ்லிம் கொங்கிரஸ் போராளிகளைப் பார்த்து பரிதாபம் வருகின்றதே தவிர கோபம் வரவில்லை.இதனை மறுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை.மக்களை மடையனாக்கும் அரசியல் வியாபாரம் செய்வதில் முஸ்லிம் கொங்கிரசை சேர்ந்தவர்கள் கில்லாடிகலென்பதை மக்கள் நன்கு அறிந்துகொண்டனர்.
அமைச்சர் றிஷாத் சம்மாந்துறையில் கைத் தொழில் பேட்டையை அமைக்க வேண்டி முயற்சித்த போது சாரனை உயர்த்தி கட்டி போராடி வெற்றி பெற்ற மன்சூரிற்கு சிலை விடயத்தில் வெற்றி பெற முடியவில்லை.முஸ்லிம் மக்களுக்கு நலவை கொண்டுவருவதை தடுக்கின்றார்.கெடுதியை உண்டாக்குவதை அனுமதிக்கின்றார்.வைத்ததை தடுக்க முடியவில்லை.அதனை அகற்றவாவது திடகங்கத்துடன் உறுதி பூண்டு முயற்சிக்கலாம் அல்லவா? அவர் இது தொடர்பில் வழங்கியுள்ள பேட்டியின் இறுதியில் தேவைப்பட்டால் இச் சிலையை அகற்றுவதற்கு முன்னின்று உழைக்க சித்தமாகவுள்ளேன் எனக் கூறியுள்ளார்.தேவையென்றால் எனும் வார்த்தை இங்கு மிகவும் அவதானமாக பார்க்க வேண்டிய ஒரு வார்த்தையாகும்.அதாவது இச் சிலையை அகற்ற வேண்டிய தேவையை இன்னும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் உணரவில்லை என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அண்மையில் அவர் படம் காட்டிய நீர்பாசன அபிவிருத்தி நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் குறித்த அமைச்சிடமிருந்து ஒதுக்கப்படும் நிதியாகும்.இதனை இவர் கொண்டு வந்ததாக மக்களை நம்ப வைத்து தனது மதிப்பை நிலை நிறுத்த முயற்சித்தார்.இதனை இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரால் மறுக்க முடியுமா? அவர் அடிக்கல் நாட்டிய ஹமீடியாஸ் நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலை வேலைகளை காணவில்லை.அவர் நாட்டிய அடிக்கல் எதுவும் இன்று கட்டடமாய் முளைக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களே!
நீங்கள் நல்லது செய்யாது போனாலும் அதனை தடுக்க வேண்டாம்.கெடுதிக்கு துணை போகவும் வேண்டாமென ஒரு மக்கள் தொண்டனாய் கேட்டுக்கொள்கிறேன்.
இப்றாஹிம் மன்சூர்
ஆசிரியர்
கிண்ணியா
The minister must be interrogated by Muslim ulamas in Sammanthurai in front of public.
ReplyDeleteHad he found with guilty he should be sacked and the SLMC should be dissolved.
ithu ummaiyaka irunthal masoorukku pee mutti adikkanum all muslim ummakkalum
ReplyDeleteI do not see any remarks from Hon Mansoor that is derogatory of Islam or Muslim.
ReplyDeleteAct as per the Teachings of ISLAM, follow the SHAREEA and Do not follow DESIRES of you to punish a one for his crime or mistake using laws other than what Islam has permitted.
ReplyDeleteEMOTIONAL is Not the WAY of ISLAM.
May Allah Guide us in the way of SALAF us SALIHEENS.
He has conspired to be given a ministerial list with portfolio from next natiinal list. Using this opportunity he has ensured his seat in the next parliament as he knows he will not be elected by public vote in the future elections.This is his political intelligence and betrayal of Sri Lankan Muslims as all the Muslim politicians use and used to do.
ReplyDeleteஇது உண்மையானால் அந்த வீடியோவை பதிவுசெய்யுங்கள்
ReplyDeleteJaffna Muslim
ReplyDeleteJaffna Muslim - Sri Lanka Muslim News, World Muslim News
November 09, 2016
புத்தர்சிலை வைப்பதானால் நானும் பணம் கொடுத்து, "சாது" "சாது" எனக் கூறுவேன் - தயாகமகே
மாணிக்கமடு மலையில் புத்தர்சிலை வைத்தது பற்றி எனக்குத் தெரியாது. இந்நாட்டில் புத்தர் சிலை அமைக்க முடியாது என்று எவருக்கும் கூறமுடியாது. இதற்காக சண்டை பிடிக்காதீர்கள்.
எங்கும் புத்தர்சிலை வைப்பதனால் நானும் பணம் கொடுத்து "சாது" "சாது" எனக் கூறுவேன் என்று ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது மாணிக்கமடு மலையில் சிலை வைப்பு தொடர்பாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் தயாகமகே இவ்வாறு கூறினார். அமைச்சர் தயாகமகே அங்கு தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்;
மாணிக்கமடு மலையில் புத்தர்சிலை வைத்திருப்பது பற்றி இப்போது தான் நான் அறிகிறேன். நாட்டில் ஒரு நாளைக்கு 100க்கு மேற்பட்ட புத்தர்சிலைகள் பன்சலைகளிலும் மற்றும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.
தமிழ் கட்சிகள், முஸ்லிம்கள், கிறிஸ்தவ மத தலைவர்கள் பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்க வேண்டுமெனக் கூறியுள்ளார்கள். அமைச்சரவை, பிரதமர் ரணில் அனைவரும் இதனை அங்கீகரித்திருக்கிறார்கள்.
வரலாற்றில் தீகவாபி பன்சலைக்கு 12 ஆயிரம் ஏக்கர் காணி சொந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறென்றால் கல்முனை, பொத்துவில் எல்லாம் தீகவாபி பன்சலைக்கே சொந்தம்.
எமது நாட்டின் காடுகளிலும் பாகிஸ்தானிலும் நிலத்தை அகழ்ந்தால் அங்கும் புத்தர் சிலைகளே கிடைக்கின்றன. நான் கடந்த வாரம் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தேன். பாகிஸ்தான் முஸ்லிம்கள் புத்தர் சிலைகளைப் பாதுகாக்கின்றார்கள். நீங்கள் இங்கு புத்தர்சிலைக்காக சண்டை பிடிக்கின்றீர்கள்.
இடையில் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் குறுக்கிட்டார். புத்தர்சிலை வைக்கின்றீர்கள் வணங்குவதற்கு மக்கள் இல்லையே என்றார். "சாது","சாது" என்று கூறி மக்கள் வருவார்கள் என்று அமைச்சர் தயாகமகே பதிலளித்தார்.
தாது கோபுரம் அமைப்பதற்கு நான் 135 சீமெந்து மூடைகளை வழங்கியிருக்கிறேன். இந்நாட்டின் அரசியல் யாப்பில் பௌத்தத்துக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- யூ.எல்.றியாஸ் -
Jaffna Muslim நேரம் Wednesday, November 09, 2016