Header Ads



சிங்களவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் அல்ல - யுத்தத்தை கேட்டால், போரிட விருப்பத்துடன் இருக்கிறோம்

சிங்களவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் அல்ல எனவும் மீண்டும் யுத்தத்தை கேட்டால், போரிட விருப்பத்துடன் இருப்பதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

புதுசசுன மற்றும் அரசியலமைப்பு நாட்டின் எதிர்காலம் என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பௌத்த மதத்திற்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்து வந்தது.

இனவாத, மதவாத சட்டமூலங்களை கொண்டு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேசத்தை மகிழ்விக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சர்வதேச சக்திகள் அச்சமின்றி நாட்டுக்குள் இருந்து கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க ஆலோசனை வழங்கி வருகின்றன.இது மிகவும் பயங்கரமான நிலைமை.

வெளிநாட்டில் இருந்து வெள்ளையருக்கு தேவையான வகையில் நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கம் நாடு, இனம் மற்றும் புத்தசாசனத்தில் கைவைக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றோம்.

வெள்ளையர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் முதுகெலும்பில்லாத இனமல்ல. சிங்கள இனம் ஒரு நாகரீகமான இனம்.

துட்டகைமுனு மன்னன், எல்லாளனின் கல்லறைக்கு அருகில் செல்லும் போது எதிரியாக இருந்தாலும் எல்லாளனுக்கு மரியாதை செலுத்தினார்.

உலகில் எந்த இனமும் தனது எதிரிக்கு இப்படி மரியாதை கொடுத்ததில்லை எனவும் எல்லே குணவங்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் முஸ்லிகளின் எதிரியான எஹூதியின் பிரேதம் சென்ற பொது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.யாராக இருந்தாலும் மரணித்த மனித உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு படித்துக்கொடுத்தார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.