இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் விமானம், ஞாயிற்றுக்கிழமை புறப்படுகிறது
இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் பயணிக்கும் முதல் விமானம் எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.
இறுதி விமானம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்திரிகர்களைக் கொண்டு செல்லவுள்ளது.
இலங்கை யாத்திரிகர்கள் தமது கடமைகளைப் பூர்த்தி செய்து கொண்டு செப்டெம்பர் மாதமும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திலும் நாடு திரும்புவார்கள்.
சவூதி அரேபியா ஜித்தாவிலிருந்து இறுதி விமானம் அக்டோபர் 7 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுடன் இலங்கை வந்தடையவுள்ளது.
இவ்வருடம் ஹஜ் யாத்திரிகர்கள், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஹஜ் முகவர்கள் என்போர் இரண்டு வகையான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுக் கொள்ளவுள்ளனர்.
ஹஜ் யாத்திரிகர்களும் திணைக்களமும் ஒரு உடன்படிக்கையிலும் திணைக்களமும் ஹஜ் முகவர்களும் ஒரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவுள்ளனர்.
இந்த உடன்படிக்கைகளில் ஹஜ்ஜாஜிகளின் நலன்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
உடன்படிக்கைகளை மீறும் ஹஜ் முகவர்களுக்கு எதிராக அரச ஹஜ் குழு நடவடிக்கைகளை எடுக்கும். குற்றவாளிகளாகக் காணப்படும் ஹஜ் முகவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படும் என்றார்.
Post a Comment