Header Ads



வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் - தமிழரசு கட்சி மாநாட்டில் தீர்மானம்

இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக தீர்வே வேண்டும் என்பதே இலங்கை தமிழரசுக்கட்சியின் தீர்மானம் என கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று மாலை 6.30 மணியளவில் முடிவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

விசேடமாக இன்றைய அரசியல் சூழ்நிலை அரசியல் அமைப்பு சட்ட உருவாக்கம் மற்றும் எமது பிரதேசங்களில் இயல்பு வாழ்வுக்கு எமது மக்கள் திரும்ப முடியாதுள்ளமைக்கான பல அழுத்தமான விடயங்கள் போன்றவற்றை இன்று நாம் பேசி ஆராய்ந்திருக்கின்றோம்.

இதன் இறுதியில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவையாவன,

தமிழரசுக்கட்சி எங்களுடைய போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுவதாகவும் அப்படியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் விசமத்தனமாகவும் பொய்யாகவும் ஒரு பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது.

எனினும் அப்படியாக ஒரு நிலைப்பாட்டை கட்சி எடுத்திருக்கவில்லை. கட்சியினுடைய நிலைப்பாடாக முழுமையான சர்வதேச ஈடுபாடோடுதான் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்பது தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலைப்பாட்டில் இருந்து கட்சியோ கட்சியின் உறுப்பினர்களோ மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினாலே இலங்கையினுடைய முன்மொழிவோடு சேர்த்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கட்சிக்கோ கட்சி உறுப்பினர்களுக்கோ கிடையாது என்பதனை நாம் ஏகமனதாக இணங்கியிருக்கின்றோம்.

அடுத்து அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்பதுதான் நாம் எடுத்துள்ள நிலைப்பாடு என்று ஒரு பொய்யானதும் விசமத்தனமானதுமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அப்படியான நிலைப்பாட்டை கட்சியோ கட்சி தலைமையோ கட்சியின் உறுப்பினர்கள் எவரேனும் எந்த காலத்திலும் எடுத்திருக்கவில்லை.

சமஸ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக ஒரு தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே தொடர்ச்சியாக நாம் இன்றும் கொண்டுள்ள நிலைப்பாடு அது தொடர்ந்தும் இருக்கும்.

இதை விடுத்து எந்த மாற்றுக்கருத்தும் எந்தக்காலத்திலும் எடுக்கப்படவில்லை என்பதும் நாங்கள் ஒரு தீர்மானமாக எடுத்துள்ளோம்.

மற்றும் இதுவரை காலமும் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் மக்களின் இயல்பு வாழ்வு சம்பந்தமாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் எடுத்துள்ள நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஆமோதிப்பதாகவும் ஆதரிப்பதாகவும் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானத்தை எடுத்துள்ளது.

இவை தவிரவும் மேலும் இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம். அதாவது முன்னாள் போராளிகள் அதிகளவில் மரணிப்பதாக வந்த செய்திகளை நாங்கள் மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இதில் உண்மை இருக்குமாக இருந்தால் பாரதூரமான விடயமாகும்.

எனவே இதனை இலகுவாக புறக்கணித்து செல்ல முடியாது. அதற்கான அடிப்படை தரவுகளை அறிகின்ற விடயங்களையும் சில முன்னேற்பாடான விடயங்களையும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் தலைமையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு எஎடுத்துள்ளது.

அதனை கிழக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடாக எடுக்கும் படியாக நாம் கேட்டுள்ளோம். இதன் உண்மை சரியான விதத்தில் அறியப்படவேண்டியதாக இருக்கின்றது.

ஏனெனில் இவ்வாறான விடயம் இடம்பெற்றிருந்தால் இது பாரதூரமானதாகும். அத்துடன் இவ்வாறான செய்தி வந்துள்ளமையினால் முன்னாள் போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகவும் உளவியல் ரீதியில் பாதிப்படைந்துள்னர்.

எனவே இது மிக அவதானமாகவும் பொறுப்போடும் நேர்த்தியாகவும் கையாளப்படவேண்டிய விடயம். வெறுமனே பேசவேண்டும் எனபதற்காகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டும் என்பதற்காகவும் பொறுப்பில்லாமல் பேசி ஏற்கனவே நொந்து போயுள்ள முன்னாள் போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் மேலும் மன உளைச்சலுக்குள்ளாக்க கூடாது.

அவர்களுக்கு வேண்டிய எல்லா ஆதரவுகளையும் கொடுக்கவேண்டும் எனற தீர்மானத்தையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

8 comments:

  1. வடமாகாண முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு: தாங்கள் எடுத்திருக்கின்ற முடிவில் முஸ்லிம்களுடைய எதிர்பார்ப்பு என்ன அவர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்ட்டுள்ளார்கள் என்பதையும் ஜ நா விசாரணையில் சேர்கப்பட்டுள்ளதா
    காணாமல் போண, விடயத்திலும் ஜ நா விசாரனைக்கு கொண்டு வருவிர்களா? மூவின மக்களின் மீள் குடியேற்றத்தில் இருக்கும் தடையையும் கவனத்தில் கொல்விர்களா
    இப்படியான பல பிரச்சனைகலை வைத்துக் கொண்ணடு வட கிழக்கை இனைக்க வேண்டும் என்றால் சாத்தியப்படுமா(ஜயா அவர்களே)

    ReplyDelete
    Replies
    1. @MEERA....அமேரிக்காவின் ஜெனிவா தீர்மானத்தை தோற்கடிக்க படாதபாடுபட்டுவிட்டு, இப்போது உங்களின் விசாரணையையும் அதில் செயர்க கேட்ட வெட்கமாக இல்லையா?

      Anyway, TNA பெருந்தன்மையுடன்
      உங்களையும் சேப்பார்கள்.

      Delete
  2. வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட முஸ்லிம் சிங்கிள மனிதப் படுகொலைக்கு விடுதலைப் புலிகளுடன் கைகோர்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கும் பங்குள்ளது. பிரபாகரனுக்கும் இவர்களுக்கும் இடையில் இருந்த கருத்தொற்றுமையின் பிரகாரம் இவர்களும் தமிழீளத்தை கடுமையாக ஆதரித்தார்கள். அதனால்தான் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுத்தார்கள்.முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் ஒரு அனுதாப செய்திகூட இவர்களால் விட முடியவில்லை. பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களை படுகொலை செய்த தற்கொலை குண்டுதாரி கதிர்காமத்தம்பிக்கு காரைதீவில் ஊர்வலம் எடுத்தார்கள் இந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர்.1976ம் ஆண்டு செல்வா அவர்களினால் செய்யப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடணம், இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற தனி ஈழ தேசம் உருவாக வேண்டும் என்பதை பறைசாட்டி நின்றது. இதையொட்டியே பிரபாகரனும் ஏனைய தமிழ் தலைவர்களும் வடகிழக்கிலிருந்து முஸ்லிம்களை அடியோடு துடைத்தெறிய முயற்சித்தார்கள். மதச்சார்பற்ற தனி ஈழக்கனவு நிறைவேறாமல் தமிழர் விடுதலைப் புலி தலைவர்கள் இறந்து விட்டார்கள். ஆனால் இன்னும் இறக்காமல் இருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் ஈழம் அடைய முயற்சிக்கின்றார்கள். அதனால்தான் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று படாத பாடு படுகின்றார்கள். இதையறியாத நமது சாணக்கிய காங்கிரஸ் தலைவரும் வடமாகானத்தைச்சேர்ந்த பா.மன்ற தேர்தலில் தோல்வியுற்ற சிலரும் த.வி கூட்டணிக்கு சோரம்போய் அமைச்சர் ரிஷாத்துககு எதிராகவும் வடகிழக்கு இணைப்புக்கு ஆதரவாகவும் யாழ்ப்பாணத்தில் ஊடக மாநாடு நடத்திவிட்டு அவர்களின் பிரியானியையும் சாப்பிட்டு விட்டு சேதாரம் இல்லாத விட்டுக்கொடுப்பை செய்வோம் என்றும், அரசியல் என்பது சாதிக்க கூடியவற்றை சாதிக்கும் கலை என்றும் அங்கு கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppressions, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate.
    The Eastern Province was formally born on 1 January 2007. On 14 July 2006, the JVP filed three separate petitions with the Supreme Court of Sri Lanka requesting a separate Provincial Council for the East. On 16 October 2006 the Supreme Court ruled that the proclamations issued by President Jayewardene on 2nd., and 8th., September 1988 were null and void and had no legal effect. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. The political campaign spearheaded by former Minister and Secretary General Hassanali for a separate Muslim Provincial Council or Administrative Unit is reasonable in the present context of the detrimental politics/policies of the Yahapalana government with regards the “MUSLIM FACTOR” issues. This separate Muslim administrative unitis is in line with the policies of the late M. H. M. Ashraff, the founder of the SLMC. Hassanali is quoted in the media as to have said that “The late Mr. Ashraff had proposed that the Muslim community must be considered as an equal stakeholder in Sri Lanka, be recognized as a separate ethnic community and be given a separate provincial council”. The Muslim community in the East should fully support this thinking irrespective of party politics, be it SLMC, ACMC, National Congress, UNP, SLFP, Ekkabadde Vipaksaya or NMGG (National Movement for Good Governanace). The proposed Muslim administered provincial council should will be carved out from the Muslim majority local authorities in the Trincomalee, Batticaloa and Manner districts. The three districts must be merged with three coastal districts comprising of three electorates, namely Pottuvil, Samanthurai and Kalmunai, it has been proposed, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

    ReplyDelete
  4. கிழக்கு மாகானத்தை பற்றி இப்படி முடிவு நீங்கள் எடுப்பதற்க்கு கிழக்கில் இருப்பவர்கள் எல்லாம் என்ன தமிழர்களா ஐயா என்ன ஐயா சொல்லிறீர்கள்???

    ReplyDelete
  5. In my opinion I oppose to merge North and East. It has to be two different entity

    ReplyDelete
  6. என்ன தீர்வு வந்தாலும் குழப்புவது தான் உங்கள் பரம்பரை வியாதியாயிற்றே. BBS யிடம் மருந்து வாங்கி குடியுங்கள், சுகம் வரும்.

    ஆணால், USA/இந்தியா சொல்லுகின்றபடி வடகிழக்கில் தீர்வு அமைந்தால் தான் ஜெனிவா தீர்மானத்தின் தாக்கத்தை குறைக்கலாம், இராணுவத்தினரை காப்பாற்றலாம்.
    எனவே அரசாங்கத்துக்கு யார் முக்கியம் நீங்களா? ராணுவத்தினரா?

    ReplyDelete
  7. Ajan,
    We do not have join with TNA which comprise some terrorist elements. East is east and North is north. NO AMALGAMATION AT ANY COST.

    ReplyDelete

Powered by Blogger.