Header Ads



ராஜபக்ச குழுவினருக்கு, இறைவன் கொடுத்த தண்டனை

இரண்டு முறை நாட்டு மக்கள் அதிகாரத்தில் அமர்த்திய பின்னர், ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்ட ராஜபக்ச குழுவினர் செய்த குற்றங்களுக்காக இறைவன் கொடுத்த தண்டனை காரணமாக தற்போது வீதியில் நடப்பதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற இலவச அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடவுளிள் தண்டனையை அனுபவித்து வரும் ராஜபக்சவினர் தற்போது விகாரைகள், ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகில் எந்த தலைவரும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்ட பின்னர் அதிகாரத்தை கோரி வீதியில் நடந்ததில்லை.

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர்கள் செய்த தவறுகளுக்கு கடவுளிடம் இருந்து மட்டுமல்ல மக்களிடம் இருந்தும் எந்த மன்னிப்பும் கிடைக்காது எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.