Header Ads



டாக்கா தாக்குதலை நடத்தியோர் படித்த, பணக்கார குடும்பத்தினர்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடந்த, மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் எல்லோரும் நன்கு படித்தவர்கள், செல்வந்தக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இத்தாக்குதலை நடத்தியவர்கள் அனைவரும் பங்களாதேஷ் நாட்டவர்கள் என்றும், அவர்கள் உள்ளூர் அமைப்புகளிடமிருந்தே ஆணைகளைப் பெற்றனர், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) என்று கூறிக்கொள்ளும் அமைப்பிடமிருந்து அல்ல என்றும், பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் அசதுஸ்ஸமான் கான் கூறினார்.

இந்தத் தாக்குதல்தாரிகளின் உடல்களின் படங்களையும் அவர்களின் பெயர்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஒரு சந்தேக நபர் உயிர் தப்பிய நிலையில், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறார்.

டாக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த இத்தாக்குதலில் 20 பணயக் கைதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோனோர் வெளிநாட்டவர்களாவர்.

இத்தாக்குதலை தாம் தான் நடத்தியதாக இஸ்லாமிய தேசம் குழு பொறுப்பேற்றபோதும் பங்களாதேஷ் அரசு அதனை மறுத்துள்ளது.


No comments

Powered by Blogger.