மஹிந்தவின் பெயர், நீடிக்க வேண்டும் - ரணில் அடம்பிடிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை காப்பாற்றும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றின் பெயர்களிலிருந்து மஹிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிரதேச அரசியல் தலைவர்கள் சிலரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சீன உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு பிரதான திட்டங்களான துறைமுகம் மற்றும் விமான நிலையத்திலிருந்து மஹிந்தவின் பெயரை நீக்கி விடுமாறு பிரதமரிடம், பிரதேச அரசியல்வாதிகள் கோரியுள்ளனர்.
எனினும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும் பிரதமர் ரணிலிடம் இவ்வாறான ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதும் அவர் இதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நியாயமான முடிவு
ReplyDelete