Header Ads



அல்லாஹ் எங்­களை தண்­டிக்­கட்டும் - பொது­ப­ல ­சேனா

-விடிவெள்ளி  ARA.Fareel-

'நாங்கள் முஸ்­லிம்­களின் அல்­லாஹ்­வையும் முஹம்மத் நபி­யையும் அவ­மா­னப்­ப­டுத்­த­வில்லை. இதனை எங்கும் நிரூ­பிக்கத் தயா­ராக இருக்­கின்றோம்.

எமது செய­லாளர் ஞான­சார தேரர் அல்­லாஹ்­வையும் முகம்மத் நபி­யையும் அவ­மா­னப்­ப­டுத்­தி­யி­ருந்தால் அல்லாஹ் எங்­களை தண்­டிக்­கட்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தெரி­வித்தார். 

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, ஆர்.ஆர்.ரி அமைப்பு முஸ்லிம் கவுன்ஸில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், அசாத்­சாலி ஆகியோர் முன்­வைத்­துள்ள ஞான­சார தேரரின் கருத்­து­க­ளுக்கு எதி­ரான முறைப்­ப­ாடுகள் தொடர்பில் பொது­ப­ல­சேனாவின் நிலைப்­பாட்­டினை அவர் விளக்­கினார். 

ஞான­சார தேரரின் உரை­யையும் வெளி­யிட்ட கருத்­து­க­ளையும் தவ­றாகப் புரிந்து கொண்டு அர­சி­யல்­வா­தி­களும் முஸ்லிம் அமைப்­பு­களும் முஸ்­லிம்­களை தவ­றாக வழி­ந­டாத்­து­வ­துடன் வெறுப்­பு­ணர்­வினைத் தூண்­டு­கின்­றன என்றும் அவர் கூறினார். 

அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில் 

'அசாத்­சாலி நடாத்­திய பத்­தி­ரிகை மாநாட்டில் ஞான­சார தேர­ருக்கு சவால் விட்­டி­ருக்­கிறார். சிறையில் அடைக்க வேண்­டு­மென்று கோரி­யி­ருக்­கிறார். ஞான­சார தேரரை சிறையில் அடைப்­ப­தற்கு அசாத்­சாலி யார்? ஞான­சார தேரர் அல்­லாஹ்­வையும் முஹம்மத் நபி­யையும் நிந்­தித்தால் தற்­கொலைப் படை­யாக மாறி அவரை கொல்­வ­தற்கும் தயார் என்று சவால் விட்­டி­ருக்­கிறார்.

அல்­லாஹ்­வையும் குர்­ஆ­னையும் நிந்­தித்­த­வர்­களின் பெயர்­பட்­டியல் ஒன்று எம்­மிடம் இருக்­கி­றது. நாம் அப்­பட்­டி­யலை அசாத் சாலிக்கு வழங்கத் தயா­ராக இருக்­கிறோம்.

முதலில் அவர்­களைக் கொன்­று­விட்டு அவர் தானும் இறக்­கட்டும். அவர் நிறைவேற்றத் தயாரா? என்று கேட்­கிறோம். 

ஞான­சா­ர­தேரர் தான் ஏதும் தவ­றாகப் பேசி­யி­ருந்தால் அல்­லாஹ்­விடம் போய் முறை­யி­டுங்கள் முஹம்மத் நபி­யூ­டாக முறை­யி­டுங்கள் என்றே சொல்­லி­யி­ருக்­கிறார். இதில் என்ன தவறு இருக்­கி­றது. யாரும் எமக்குத் தவறு செய்தால், அநி­யாயம் செய்தால் நாம் கட­வு­ளிடம் தானே முறை­யி­ட­வேண்டும். அல்­லாஹ்­விடம் தானே நீதி கேட்க வேண்டும். 

நாட்­டி­லுள்ள சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் இவ்­வி­வ­கா­ரத்தில் குழப்­ப­ம­டையத் தேவை­யில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பை அர­சி­யல்­வா­திகள் தமது சொந்த நலத்­துக்­காக தீவி­ர­வாத அமைப்­பாக விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கி­றார்கள். நாம் எமது நடவடிக்கைகளில்  தெளிவாகவே இருக்கிறோம்.

பௌத்த மதத்தின் பாதுகாவலர்கள் என்றவகையில் பௌத்த மதத்துக்கும் பௌத்த கொடிக்கும் ஆபத்து விளைவிக்கும்போது அதனை தட்டிக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.

No comments

Powered by Blogger.