ஆகஸ்ட் 21 ஆம் திகதி, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நடத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2,959 பரீட்சை நிலையங்களில் இம்முறை 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
அத்துடன் 350,701 பரீட்சார்த்திகள் இம்முறையில் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.
விண்ணப்பதாரிகளின் பரீட்சை நுழைவுச்சீட்டுக்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு நேற்று (18) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் குறித்த நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறாவிடின் 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு இது தொடர்பில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அதிபர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Post a Comment