Header Ads



புதிய அரசியல் கட்சிக்கு, மஹிந்தவே தலைமை தாங்குவார் - விமல் வீரவன்ச

எதிர்காலத்தில் அமைக்கப்பட உள்ள புதிய அரசியல் கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே தலைமை தாங்குவார் என ஜே.என்.பி.யி;ன் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அரசியல் கட்சியொன்று உருவாக்கப்பட்டால் அதற்கு மஹிந்த ராஜபக்ஸவே தலைமை தாங்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கட்சியினை வழிநடத்தும் பொறுப்பு மஹிந்த ராஜபக்ஸவிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தலைமை தாங்கினால் அதில் இணைந்து கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அரசாங்கத்தின் அரசியல் சாசனத் திருத்தங்கள் நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசியல் சாசனத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் நாட்டில் பிரிவிணையை ஏற்படுத்தும் வகையிலும் அரசாங்கம் அரசியல் சாசனத்தை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.