வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட இடத்தில், அரைக் காற்சட்டையுடன் நின்ற அநுர
- MFM.Fazeer-
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க அதிகாலை வேளையில் அரைக் காற்சட்டையுடன் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.
இது குறித்து எம்மிடம் சாட்சியங்கள் உள்ளன. இந்த விடயத்தை விசாரணை செய்யும் போது நாம் அனுர சேனநாயக்கவின் சாரதியாக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரையும் விசாரணை செய்தோம்.
இதன்போது குறித்த பொலிஸ் சாரதிக்கு எந்த விடயத்தை எப்படி வாக்கு மூலமாக வழங்க வேண்டும் என்பதை அனுர சேனநாயக்க சொல்லிக் கொடுத்துள்ளதை எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.
எனவே சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிணையில் விடுதலையானால் சாட்சிகளை இப்படிக் கலைத்துவிடுவார்.
எனவே அது விசாரணைக்கு பாதிப்பாக அமையும் என அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் தெரிவித்தார்.
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த விவகாரத்தில் விசாரணைகளை மூடி மறைக்கவும் கொலை சதி முயற்சியுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா, முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடும் போதே சிரேஷ்ட சட்டவாதி இதனைச் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய வழக்கு விசாரணையின்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகளால் மேலதிக விசாரணை அறிக்கையொன்று நீதிவானிடம் கையளிக்கப்பட்டது.
' கடந்த 14 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளன. வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் முதலில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க அழுத்தம் கொடுத்துள்ளமை உறுதியாகிறது. அத்துடன் வாக்கு மூலம் பெறும் போதும் அதிலும் அவர் தலையீடு செய்து அழுத்தங்களை பிரயோகித்துள்ளார்.
இதனைவிட முதலாவது சந்தேக நபரான சுமித் சம்பிக்க பெரேரா, தாஜுதீன் விவகாரம் குறித்து எமக்கு அளித்த விளக்கம் அனைத்தும் பொய்யானவை என்பது சாட்சியங்கள் ஊடாக தெரியவந்துள்ளது. எனவே இவர்கள் இருவரும் விசாரணையை மூடி மறைத்துள்ளமை உறுதி.
எனினும் மனிதப் படுகொலையை ஏன் இவர்கள் விபத்தாக காட்ட வேண்டும், இதற்கான அவசியம் என்ன என்ற இடத்திலேயே தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கொலையுடன் இவர்களுக்கு சதி முயற்சி குற்றச் சாட்டு உள்ள நிலையில் அந்த சதி கொலையின் பின்னர் செய்யப்பட்டதா அல்லது கொலையின் முன்னர் பிரதான சந்தேக நபருடன் இணைந்து செய்யப்பட்டதா என்பதை வெளிப்படுத்த விசாரணைகள் தொடர்கின்றன என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் மேற்படி இரு சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் ஜூன் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க அதிகாலை வேளையில் அரைக் காற்சட்டையுடன் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.
இது குறித்து எம்மிடம் சாட்சியங்கள் உள்ளன. இந்த விடயத்தை விசாரணை செய்யும் போது நாம் அனுர சேனநாயக்கவின் சாரதியாக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரையும் விசாரணை செய்தோம்.
இதன்போது குறித்த பொலிஸ் சாரதிக்கு எந்த விடயத்தை எப்படி வாக்கு மூலமாக வழங்க வேண்டும் என்பதை அனுர சேனநாயக்க சொல்லிக் கொடுத்துள்ளதை எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.
எனவே சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிணையில் விடுதலையானால் சாட்சிகளை இப்படிக் கலைத்துவிடுவார்.
எனவே அது விசாரணைக்கு பாதிப்பாக அமையும் என அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் தெரிவித்தார்.
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த விவகாரத்தில் விசாரணைகளை மூடி மறைக்கவும் கொலை சதி முயற்சியுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா, முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடும் போதே சிரேஷ்ட சட்டவாதி இதனைச் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய வழக்கு விசாரணையின்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகளால் மேலதிக விசாரணை அறிக்கையொன்று நீதிவானிடம் கையளிக்கப்பட்டது.
' கடந்த 14 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளன. வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் முதலில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க அழுத்தம் கொடுத்துள்ளமை உறுதியாகிறது. அத்துடன் வாக்கு மூலம் பெறும் போதும் அதிலும் அவர் தலையீடு செய்து அழுத்தங்களை பிரயோகித்துள்ளார்.
இதனைவிட முதலாவது சந்தேக நபரான சுமித் சம்பிக்க பெரேரா, தாஜுதீன் விவகாரம் குறித்து எமக்கு அளித்த விளக்கம் அனைத்தும் பொய்யானவை என்பது சாட்சியங்கள் ஊடாக தெரியவந்துள்ளது. எனவே இவர்கள் இருவரும் விசாரணையை மூடி மறைத்துள்ளமை உறுதி.
எனினும் மனிதப் படுகொலையை ஏன் இவர்கள் விபத்தாக காட்ட வேண்டும், இதற்கான அவசியம் என்ன என்ற இடத்திலேயே தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கொலையுடன் இவர்களுக்கு சதி முயற்சி குற்றச் சாட்டு உள்ள நிலையில் அந்த சதி கொலையின் பின்னர் செய்யப்பட்டதா அல்லது கொலையின் முன்னர் பிரதான சந்தேக நபருடன் இணைந்து செய்யப்பட்டதா என்பதை வெளிப்படுத்த விசாரணைகள் தொடர்கின்றன என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் மேற்படி இரு சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் ஜூன் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment