Header Ads



ஞானசாரர் தயார் - மஹி­யங்­க­னையில் கல­வரம் உரு­வானால், முஸ்லிம் கவுன்­ஸிலே பொறுப்பு

மஹி­யங்­கனை விவ­காரம் தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு விடுக்­கப்­படும் சவால்­களை எதிர்­கொள்ள பொது­பல­ சேனா அமைப்பு தயா­ரா­க­வுள்­ளது. மஹி­யங்­க­னையில் அளுத்­கமை போன்ற கல­வரம் உரு­வானால் அதற்கு முஸ்லிம் கவுன்­ஸிலே பொறுப்புக் கூற­வேண்டும். 

அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியும் முஸ்லிம் கவுன்­ஸிலே என சந்­தே­கிக்­கின்றோம் என பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலான்த விதா­னகே தெரி­வித்தார். 

மஹி­யங்­கனை சம்­பவம் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளி­யி­டு­கையில்,

பௌத்­தர்கள் முஸ்லிம் கொடி­யையோ குர்­ஆ­னையோ எரிக்­க­வில்லை. மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­களே பௌத்த கொடி­யையும் வெசாக் கூடு­க­ளையும் எரித்­துள்­ளார்கள். பௌத்த கொடியை எரித்த முஸ்­லிம்­களை கண்­டிக்­காது அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தாது முஸ்லிம் கவுன்ஸில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முறை­யிட்­டுள்­ளது. 

முஸ்லிம் கவுன்­ஸிலின் கடமை முஸ்­லிம்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தா­கவும் முஸ்­லிம்­களின் தவ­று­களைக் கண்­டிப்­ப­தா­கவும் இருக்க வேண்டும்.

அதை­வி­டுத்து தொடர்ந்து பௌத்த அமைப்­பு­களைக் கண்­டிப்­ப­தாக இருக்கக் கூடாது. ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் தனது உரையில் பொலிஸார் தக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாது விடின் மஹி­யங்­க­னையில் அளுத்­கமை போன்ற கல­வ­ரங்கள் உரு­வா­கலாம் என்றே கூறி­யுள்ளார்.

இதில் என்ன தவறு இருக்­கி­றது? இன வாதம் இருக்­கி­றது? 

முஸ்லிம் கவுன்­ஸிலின் நட­வ­டிக்­கைகள் நாட்டில் இன முறு­கல்­களைத் தோற்­று­விப்­ப­ன­வா­கவே அமைந்­துள்­ளன. பௌத்­தர்­களை இன­வா­தி­க­ளாகச் சித்­த­ரித்து அரபு நாடு­களில் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது பௌத்­தர்­களின் மனதைப் புண்­ப­டுத்தும் செய­லாகும்.

நாம் இன­வா­திகள்  என்றால் எம்­முடன் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.  நாம் முஸ்லிம் அடிப்படைவாதத்தையே எதிர்க்கிறோம். ஏனைய முஸ்லிம்களுடன் நல்லுறவையே பேணி வருகின்றோம் என்றார்.  விடிவெள்ளி  ARA.Fareel

3 comments:

  1. Enough hatred is done by you.. Do not try to justify any wrong action of you.

    ReplyDelete
  2. முட்டாள் தனமான தர்க்கரீதியற்ற குற்றச்சாட்டு இது! இந்த
    நாய்கள் மீண்டும் மஹியங்கனயையும் ஓர் அளுத்கம ஆக்க முயற்சி செய்கிறானுகள்.

    ReplyDelete
  3. Let us handle this situation with tact, wit, and wisdom. There is still room for open dialogue and compromise.But let us avoid inflammatory comments and indecent languages and aggravate the situation.

    ReplyDelete

Powered by Blogger.